Wednesday, January 18, 2012

தமிழ் நாட்டில் கல்வி


தமிழ் நாட்டில் உண்மையான கல்வி பரவ வேண்டுமானால், சகல சாஸ்திரங்களும் தமிழ் பாஷை மூலமாகவே கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையை நமக்குள்ளே அறிவுடையோரெல்லோரும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை அனுஸரனைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை. ஐரோப்பிய ஸ்திரீயாகிய மிஸ்ஸஸ் பெஸண்ட் கூடச் சில தினங்களின் முன்பு பெங்களூரில் செய்த பிரசங்க மொன்றிலே தமிழ் பாஷையை மிகவும் வியந்து கூறி, நாமெல்லோரும் தமிழ்ப் பயிற்சியில் தக்கபடி சிரத்தை செலுத்தாமல் இருப்பது பற்றி வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. இப்படி நம்மைப் பார்த்துப் பிறர் இரக்கப் படும்படியான அவமான நிலை விரைவில் நீங்க வேண்டுமென்று தேவர்களை வணங்குகிறோம்.

No comments:

Post a Comment