Wednesday, May 1, 2013

ஆசாரத் திருத்த மஹாசபை

இப்போது நடைபெறும் 1920-ம் வருஷம் ஜூன் மாஸம் 22-ம் தேதியன்று தொடங்கி, அன்றைக்கும், அடுத்த இரண்டு மூன்று தினங்களும், திருநெல்வேலியில் “மாகாண ஆசாரத் திருத்த மஹாஸபை” நடைபெறும் என்று தெரிகிறது. 21-ந் தேதியன்று மாகாணத்து ராஜரீக மஹா ஸபை திருநெல்வேலியில் கூடுகிறது. அதை அனுசரித்து, அதே பந்தரில் ஆசார ஸபையும் நடக்கும்.

22-ந் தேதி முதல், இரண்டு மூன்று நாள் கூடி, அங்கு, நம் மாகாணத்து ஆசாரத் திருத்தக்காரர் வழக்கப்படி விவாதங்கள் நடத்தி மாமூலைத் தழுவிச் சில தீர்மானங்கள் செய்து முடித்துப் பின்பு கலைந்து விடுவார்கள்.

எனக்குக் கிடைத்திருக்கும் அழைப்புக் கடிதத்தைப் பார்க்குமிடத்தே இந்த வருஷம் நடப்பது இருப்பத்திரண்டாவது வருஷக் கூட்டமென்று விளங்குகிறது. சென்ற இருபத்திரண்டு வருடங்களாக இம்மாகாணத்திலுள்ள ஆசாரத் திருத்தக் கூட்டத்தார் வெறுமே ஸபைகள் கூடித் தீர்மானங்கள் செய்திருப்பதே யன்றி உறுதியான வேலை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிய வழியில்லை.

ராஜரீக மஹா ஸபையில் செய்யப்படும் தீர்மானங்கள் கார்யத்துகுக் வராவிட்டால், “அதற்கு நாம் என்ன செய்யலாம்? அதிகாரிகள் பார்த்து வரங்கொடுத்தால் தானே யுண்டு. நாம் கேட்க மாத்திரமே தகுதியுடையோர். நம்முடைய விருப்பங்கள் நிறைவேற வேண்டுமாயின், அதற்கு அதிகாரிகள் தயவு வேண்டும்; அல்லது, இங்கிலீஷ் பார்லிமெண்டின் தயவு வேண்டும். அவை நிறை வேறாமலிருப்பது பற்றி நம்மீது குறை கூறுதல் பொருந்தாது” என்று சாக்குப் போக்குச் சொல்ல இடமிருக்கிறது.

ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயமோ அப்படியில்லை. இதில் நம்மவர்கள் செய்யும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியவர்களும் நம்மவரே யன்றி பிறரில்லை. அதிகாரிகளின் தயவு வேண்டியதில்லை. இங்கிலீஷ் பார்லிமெண்டின் கருணையும் அவசியமில்லை. இதில் நாமே வரங்கேட்டு, நாமே வரங் கொடுக்க வேண்டும். இப்படியிருந்தும் இந்த ஆசாரத் திருத்தக் கூட்டத்தாரின் முயற்சிகள் ராஜ்யத் திருத்தக் கூட்டத்தாரின் பிரயத்தனங்களைக் காட்டிலுங்க் கூடக் குறைவான பயன் எய்திருப்பதை நோக்கும்போது மிகவும் வருத்தமுண்டாகிறது.

இந்த தேசத்து ஜனத்தலைவர்கள் மனிதர்களா? அல்லது வெறும் தோல் பொம்மைகள் தானா? இவர்கள் மனித ஹருதயத்தின் ஆவலையும், மனித அறிவின் நிச்சயத்தையும், அவற்றின் பெருமைக்குத் தக்கபடி மதிப்பிடுகிறார்களா? அல்லது வெறும் புகையொத்த பதார்த்தங்களாகக் கணிக்கிறார்களா?

மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடைய மனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவிகளில் உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர்களும், சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடி அறிவுடன் வாதங்கள் நடத்தி, அறிவுடன் சில தீர்மானங்கள் செய்து முடிக்கிறார்கள். அப்பால், அத் தீர்மானங்கள் தமது சொந்த ஒழுக்கத்திலும் தேச ஜனங்களின் நடையிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவை இவர்கள் களைந்து போடும் குப்பைக்கு நிகராகவே மதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவதினின்றும் தேசத்து ஜனங்களுக்கு நன்மை விளையும் என்ற உண்மையான நம்பிக்கையுடனேயே அவை பிரேரேபணை செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில் ஏராளமான கால விரயமும் பொருட் செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக்காணோமென்றால், இந்த ஆசாரத் திருத்தக்காரரின் சக்தியைக் குறித்து நாம் என்ன சொல்லலாம். இவ்வருஷமேனும், இவ்விஷயத்தில் தகுந்த சீர்திருத்தம் ஏற்படுமென்று நம்புகிறேன். முதலாவது விஷயம், ஆசாரத்திருத்த மஹா சபையில் பேசுவோராவது, ‘உண்மையிலேயே தாம் பேசும் கொள்கையின்படி நடப்பவரா’ என்பதை நிச்சயித்து அறிந்துகொள்ள வேண்டும். மஹா சபைக்குப் பிரதிநிதிகளாக வந்திருப்போர் அத்தனைபேரிலும் பெரும் பகுதியார் ‘இப்போது உடனே தத்தம் குடும்ப வாழ்க்கையில் என்னென்ன சீர்திருத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள்’ என்பதைக் கண்டு பிடித்துப் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.

நமது மாகாண முழுமையிலும் ஆசாரத் திருத்த விஷயத்தில் சிரத்தை யுடையோர் எல்லோரும் இந்த மாதம் திருநெல்வேலிக் கூட்டத்துக்கு அவசியம் வந்து சேர முயற்சி செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தை யொட்டி, மாதர்களின் சபையொன்று நடக்கப்போகிற தாகையால், கல்வி கற்ற மாதர்களெல்லோரும் அவசியம் வந்திருந்து, தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ‘தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.’ அவரவருக்கு வேண்டிய விஷயங்களைக் குறித்து அவரவர் பாடு பட்டாலொழியக் காரியம் நடக்காது. மேலும், நம் நாட்டு ஆண்மக்கள் தமது நிலைமையை உயர்த்திக் கொள்ளக்கூடிய சுலபமான உபாயங்களைக் கூடக் கையாளத் திறமை யற்றோராகக் காணப்படுகிறார்களாதலால், நம்முடைய ஸ்த்ரீகளை மேன்மைப் படுத்துவதற்குரிய காரியங்களை முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசத்திலே விட்டுவிடாமல், மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்த்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும். அன்னிய தேசங்களில் விடுதலைக்காக உழைக்கும் ஸ்திரீகள் பெரும்பாலும் ஆண்மக்களின் உதவியை அதிகமாக நாடாமல் தமது மேம்பாட்டுக்குரிய வேலைகளைத் தாங்களே செய்து வருவதை நம் தேசத்து ஸ்திரீகள் நன்கு கவனிக்க வேண்டும்.

தமிழ் நாட்டு மக்களே! ஆரம்ப முதல் சமீப காலம் ஆசாரத் திருத்தத் தலைவர்கள் பெரும்பாலும் தேசாபிமானம், ஸ்வபாஷாபிமானம், ஆர்ய நாகரீகத்தில் அனுதாபம், இம்மூன்றும் இல்லாதவர்களாக இருந்து வந்தபடியால், பொதுஜனங்கள் இவர்களுடைய வார்த்ஹ்தையைக் கவனிக்க இடமில்லாமல் போய்விட்டது. எனினும், அவர்களுடைய கொள்ளைகளிற் பல மிகவும் உத்தமமான கொள்கைகள் என்பதில் ஐயமில்லை.
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.”
தேசாபிமானம் முதலிய உத்தம குணங்கள் இல்லாவிடினும், இந்த முயற்சி தொடங்கியவர்கள் உலகப்பொது நீதிகளை நன்குணர்ந்தோர். யாவராலே தொடங்கப்பட்டதாயினும், இப்போது இம்முயற்சி தேச ஜனங்களின் பொதுக் கார்யமாக பரிணமித்து விட்டது. எனவே, இவ்வருஷத்து மஹா ஸபையில் தமிழ் மக்கள் பெருந்திரளாக எய்தி நின்று, ஸபையின் விவகாரங்கள் பெரும்பாலும் தமிழிலேயே நடக்கும்படியாகவும், தீர்மானங்கள் பின்பு தேச ஒழுக்கத்தில் காரியப்படும் வண்ணமாகவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யக்கடவர். எதற்கும் பிரதிநிதிகள் நல்ல பெருங்கூட்டமாக வந்தால் தான் நல்ல பயன் ஏற்படும். ஜெர்மன் பாஷையில் “கூட்டம்” என்பதற்கும் “உத்ஸாஹம்” என்பதற்கும் ஒரே பதம் வழங்கப்படுகிறது. பெருங்கூட்டம் சேர்ந்தால் அங்கு உத்ஸாஹம் இயல்பாகவே பெருகும் என்பது குறிப்பு.

பொது ஜன உத்ஸாஹமே ஸகல கார்யங்களுக்கும் உறுதியான பலமாகும். எனவே, நமது தேச முன்னேற்றத்தின் பரம ஸாதனங்களில் ஒன்றாகிய இந்த ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயத்தில் நம்மவர், ஆண் பெண் அனைவரும், தம்மால் இயன்ற வகைகளிலெல்லாம் உதவி புரிந்து மிகவும் அதிகமாக உத்ஸாகம் காட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.

Wednesday, December 12, 2012

புல்லர் செய்யும் மோசம்

இந்தியா - 04.08.1906

புல்லர் நம்மை யெல்லாம் மோசம் பண்ணிவிட்டார். சென்ற வாரம் அவர் கிளம்பி விடுவாரென்று வெகு ஆனந்தத்துடன் எழுதி யிருந்தோம். அந்தக் குறிப்பு எழுதி முடிந்தவுடனேயே அவர் ராஜினாமா கொடுக்கப் போகிறா ரென்ற வதந்தி தக்க அதிகாரிகளால் மறுக்கப்படுகிற தென்ற தந்தி வந்து விட்டது. இதனையும் அக்குறிப்பின் இறுதியிலே சேர்க்கும்படியாக நேர்ந்துவிட்டது. இது என்ன கஷ்டகாலம்! கெட்ட வதந்திகள் தாம் மெய்யாக முடிகின்றனவே யல்லாமல், நல்ல வதந்திகள் பொய்யாகவே போய்விடுகின்றன. இவ்வளவிற் கப்பாலும் பெங்காளவாசிகள் புல்லர் ராஜினாமாக் கொடுக்கப் போவதாகச் சலிப்பில்லாமல் சொல்லிக் கொண்டேதானிருக்கிறார்கள்.

ஸர் பி.புல்லர் நீங்கிப்போய் விடுவதாகவும், ரெவின்யூ போர்டு ஸீனியர் மெம்பராகிய மிஸ்டர் கே.ஜி. குப்தா டி.சி.எஸ். மேற்படி ஸ்தானத்திலே நியமிக்கப்படப் போவதாகவும் பெங்காளிகள் நம்புகிறார்கள். ஆனால், பெங்காளத்து மீன் வர்த்தகர்களை எவ்வாறு அபிவிருத்தி செய்யலா மென்பதைப் பற்றி ரிப்போர்ட் செய்யும் பொருட்டு ஸ்பெஷல் கடமையில் மிஸ்டர் குப்தா நியமிக்கப்பட்டிருப்பதாகச் சமாசாரம் வந்திருக்கிறது. இதனால், இவர் லெப்டினென்ட் கர்வனர் ஸ்தானம் பெறுவாரென்ற வதந்தி தப்பென்று தெளிவாகிறது. எனவே ஸர் பி.புல்லர் சீக்கிரம் பெயர்வாரென்று கொள்வதற்கிடமில்லாமலிருக்கிறது.

(http://mahakavibharathiyar.info/b_katturaigal/pullar_seiyum.htm)

Tuesday, December 11, 2012

தமிழ் நாட்டோருக்கு இறுதி விண்ணப்பம்

13-2-1910 சூரியோதயம்

சகோதரர்களே, கதை நெருங்கிறது. சமாதானமான நியாய வழிகளிலே உங்களுக்கு ஸ்வந்திர மார்க்கங் காட்டி வந்ததைக்கூட அதிகாரிகள் நிறுத்தக் கங்கணங் கட்டிவிட்டார்கள். உங்களுக்கோ மறதி அதிகம். ஒருவர் அருகேயிருந்து ஓயாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் தான் ஞாபகமிருக்கிறது. மூன்று மாதம் படிப்பதை நிறுத்திவைத்திருந்தால் கதை முழுவதையும் மறந்து போய் விடுகிறீர்கள். மறுபடியும் அடியைப் பிடித்துச் சொல்ல வேண்டி யிருக்கிறது.

நாம் கூறிவந்த மார்க்கம் ஜனங்களுக்கு ஹிதமானதுடன் ராஜாங்கத்தாருக்கும் அபாயமில்லாதது. ஆனால், ஆங்கிலேய அதிகாரிகள் அறிவை முழுவதும் இழந்துவிட்டார்கள். வெடிகுண்டெறிபவர்களுக்கஞ்சி நமது சுதேசிய முயற்சியைக் கழுத்தை நெரிக்கத் தொடங்குகிறார்கள்.

நமது முயற்சிக்கு வயிரக் கழுத்து - எழுபது கோடி மந்திரவாள் கொண்டு வெட்டினாலும் ஒடிக்க முடியாத கழுத்து - உண்டென்பதை அவர்களறியவில்லை. அவர்கள் எப்படியும் போகட்டும். அவர்களைப் பற்றி எனக்கு விசாரமில்லை. உங்களை நினைக்கும்போதுதான் என் நெஞ்சங் கொதிக்கிறது.

தீராத வறுமை கொண்ட ஜாதி. அழகிழந்துபோன ஜாதி. பார்ப்பதற்குக் கோரமான ஜாதி. கந்தைகளை உடுத்தித் திரியும் ஜாதி. சரீர பலமில்லாத ஜாதி. மனவலிமை யில்லாத ஜாதி. ஸ்வந்திர மில்லாத ஜாதி. கடமை யறியாத ஜாதி. நோய்பற்றிய ஜாதி. கல்வி யறிவில்லாத ஜாதி. சாஸ்திர மில்லாத ஜாதி. உலக இன்பங்க ளறியாத ஜாதி. சங்கீத மில்லாத ஜாதி. நெஞ்சு கொதிக்கிறதே - என்னுடைய இரத்தமல்லவா நீங்களெல்லோரும்? உங்களை இந்த நிலைமையில் பார்க்க என் மனம் எப்படிப் பொறுக்கும்? ஒரு நாளா, இரண்டு நாளா? ஒருவரா, இரண்டு பேரா?

சகோதரர்களே, நமது முன்னோர்களிருந்த நிலைமையை மறந்து விட்டீர்களோ? அடடா! இன்னமுஞ் சோம்பரா? இன்னமும் உள் விரோதங்களா? இன்னமும் அயர்வா? எப்படிப் பிழைக்கப் போகிறீர்கள்?

ஏழைகளே, நிராயுதபாணிகளே, அற்பாயுளுள்ள நோயாளிகளே - நீங்கள் ஹிந்துக்க ளென்று ஏன் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? கல்வியும் அறிவுமில்லாத நமக்கு ஆரிய ஜாதி என்ற கெளரவ மெதற்கு? தேஜஸ், வலிமை, பராக்கிரமம், ஸ்வதந்திரம் இவை யனைத்து மில்லாத நாமங்கள் புனைந்துகொண்டு ஏன் அந்த மஹாத்மாக்களின் பெயருக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும்?

சகோதர்களே - ஒரு வார்த்தை மட்டுஞ் சொல்லுகிறேன். இன்னொரு முறை சொல்ல எனக்குச் சந்தர்பங் கிடைக்குமோ கிடையாதோ, அதுவே சந்தேகத்தி லிருக்கிறது. ஆகையால் தயவு செய்து இந்த ஒரு வார்த்தையை மனதில் பதிய வைக்கும்படி உங்கள் பாதங்களில் விழுந்து கேட்டுக் கொள்ளுகிறேன்.

அதாவது, எது வந்தாலும் அதைரியப்படாதேயுங்கள். மாதாவை மறந்துவிட வேண்டாம். நியாயத் தவறான செய்கைகள் செய்ய வேண்டாம். தைரியம், உறுதி இந்த இரண்டுமே நம்மைக் காக்கப் போகிறது.

தேசத்தை உத்தாரணஞ் செய்வதற்கு ஒவ்வொருவரும் இயன்றதெல்லாஞ் செய்க. நாம் செய்யக்கூடியது சிறிதுதானேயென்று கருதி அதனைச் செய்யாதிருந்து விடலாகாது. நியாயமான சட்டங்களை மீற வேண்டாம். அநியாயமான சட்டங்களை யெடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டும். சுதேசிய விரதத்தை உயிருள்ள வரை கைவிடாமல் ஆதரித்து வரவேண்டும். மானத்தைப் பெரிதாக நினைக்க வேண்டும். ஸ்வதந்திரத்தை எப்போதுந் தியானஞ் செய்து வர வேண்டும். வந்தே மாதரம்.

ஸி.சுப்பிரமணிய பாரதி

Monday, December 10, 2012

Andal - The Vaishnava Poetess

Preoccupied from the earliest times with divine knowledge and religious aspiration the Indian mind has turned all forms of human life and emotion and all the phenomena of the universe into symbols and means by which the embodied soul may strive after and grasp the supreme. Indian devotion has especially seized upon the most intimate human relations and made them stepping stones to the supra-human relations and made them stepping stones to the supra – human. God the Guru, God the Master, God the Friend , God the Mother, God the Child, God the Self, each of these experiences-for to us there are more than merely ideas, - it has carried to its extreme possibilities. But none of them has it pursued, embraced, sung with a more exultant passion of intimate realization than the yearning for God the Lover, God the Beloved. It would seem as if this passionate human symbol were the natural culminating-point for the mounting flame of the soul’s devotion; for it is found wherever that devotion has entered into the most secret shrine of the inner temple. We meet it in Islamic poetry; certain experiences of the Christian mystics repeat the forms and images with which we are familiar in the East, but usually with a certain timorouess foreign to the Eastern temperament. For the devotee who has once had this intense experience it is that which admits to the most profound and hidden mystery of the universe; for him the heart has the key of the last secret.

The work of a great Bengali poet has recently re-introduced this idea to the European mind, which has so much lost the memory of its old religious-traditions as to welcome and wonder at it as a novel form of mystic self-expression. On the contrary it is ancient enough, like all things natural and eternal in the human soul. In Bengal a whole period of national poetry has been dominated by this single train and it has inspired a religion and a philosophy. And in the Vaishnavism of the far south, in the songs of the Tamil alwars, we find it again in another form, giving a powerful and original trun to the images of the our old classic poetry; for there it has been sung out by the rapt heart of a woman to the Heart of the Universe.

(மேலும் வாசிக்க...)

Sunday, December 9, 2012

Blunting the Imagination

“The greatest crime that can be laid at the doors of one generation by another is that of blunting the imagination of the latter, because where there is no imagination and where there is no vision of a higer and nobler life, the people perish”
(New India, Februrary 18)

Truer words were never written.

For the imagination – not that of the idler and the dreamy parasite, but the vigorous and positive imagination of the worker, “ the vision of higher and nobler life” – this imagination is the mother of a Nation’s hope. This imagination makes a Nation’s seers, its poets and its builders of all types.

This imagination is the way to immortality, the latter that man climbs to arrive at divinity.

(மேலும் வாசிக்க...)

Saturday, December 8, 2012

India and the World


The Mother has said: “Let the world recognize me.” And the world is doings so. The Sikhs and the Rajputs on the battle fields of Europe are only supplementing the endeavors of Prof. Bose and the other intellectual leaders of Great India.

The Mother has said : “ I Manifest myself once again in my true glory”. And the nation look at her and say : “Thy beauty is great. It will be a joy for ever unto all humanity.” The intellectual classes of th West have already felt the world’s need for India. And we hope that our soldiers will convert the Western “masses” also the cult of Great India.

For the “masses”, with their instinctive love for expressed realities, everywhere demand physical proofs from spiritual changes. And the “masses” are quite right.

(மேலும் வாசிக்க...)

Friday, December 7, 2012

The Crime of Caste

“Four Varnas were made by me according to variations of character and work.”

The Gita says this, and it specifies the occupations and traits pertaining to each Varna. Everyone knows what they are. I may be permitted to call this Chatur varnya (Four Varna System) bye the name of “ the Gita theory of society”, although it is well known that the same ideal is upheld in most of the ancient writings. I do so for convenience. The Gita theory may, or may not, promote the highest interests of man. It was never experimented in its pure form, or, if it was, history tells us nothing about it. As a hypothesis it is one of the best and the most attractive. At least some of us think so.

But the caste law is leagues away from the Gita theory. For the Brahmanas have long ceased to make Vedas and Shastras; they have long ceased to think seriously of eternal verities of the sciences of this earth. They have totally forgotten the meaning of the older and purer writings. They adopt all professions. They are cake-sellers, railway clerks, and police – constables. And their general intelligence and character are naturally on a level with their pursuits. The Kshatriyas have long ceased to govern.

(மேலும் வாசிக்க...)