Monday, June 28, 2010
நெஞ்சுக்கு நீதியும்
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
"நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும்"என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு
சொல்லு மவர்தமை யே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
நம்புவ தேவழி யென்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும்"சக்தி"யென் றாலுனைக்
கும்பிடு வேன்,மன மே!
அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்ச மில்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை
அத்தனை யுங்களைந் தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை,காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்!
Wednesday, May 5, 2010
பாரதியார் பாடல்கள் - மகாராஜபுரம் சந்தானம்
மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய பாரதியார் பாடல்களின் தொகுப்பு.
கணீர்க் குரலும், சரளமான நடையும் அரிதானது; சந்தானத்திற்கு மட்டுமே உரித்தானது.
1. ஆசை முகம் மறந்து போச்சே
2. ஆயிரம் தெய்வங்கள்
3. சின்னஞ்சிறு கிளியே
4. மோகத்தைக் கொன்றுவிடு
5. நெஞ்சுக்கு நீதியும்
6. சுட்டும் விழிச் சுடர்தான்
7. வெள்ளைக் கமலத்திலே
8. வெள்ளைத் தாமரை
இதைப் பதிவேற்றியவருக்கு நன்றி.
இங்கு பதிவிறக்கம் செய்யலாம்:
Thursday, April 29, 2010
செளமியா - பாரதியார் பாடல்கள்
செளமியா அவர்கள் பாடிய பாரதியார் பாடல்கள்.
1. பூலோக மாரி
2. சின்னஞ்சிறு கிளியே
3. காலா உன்னை
4. காணி நிலம்
5. முன்னை இலங்கை
6. முருகா முருகா
7. ஓய்! திலகரே
8. பாருக்குள்ளே நல்ல நாடு
9. சொல்லவல்லாயோ கிளியே
10.தேடி உன்னை
11. திருவைப் பணிந்து
12. வாழிய செந்தமிழ்
13. வெடி படும் அண்டத் (ஊழிக்கூத்து)
14. வீர சுதந்திரம்
15. விடுதலை
16. வில்லினையொத்த
இதைப் பதிவேற்றியவருக்கு நன்றி.
இங்கு பதிவிறக்கம் செய்யலாம்:
1. பூலோக மாரி
2. சின்னஞ்சிறு கிளியே
3. காலா உன்னை
4. காணி நிலம்
5. முன்னை இலங்கை
6. முருகா முருகா
7. ஓய்! திலகரே
8. பாருக்குள்ளே நல்ல நாடு
9. சொல்லவல்லாயோ கிளியே
10.தேடி உன்னை
11. திருவைப் பணிந்து
12. வாழிய செந்தமிழ்
13. வெடி படும் அண்டத் (ஊழிக்கூத்து)
14. வீர சுதந்திரம்
15. விடுதலை
16. வில்லினையொத்த
இதைப் பதிவேற்றியவருக்கு நன்றி.
இங்கு பதிவிறக்கம் செய்யலாம்:
Tuesday, April 27, 2010
எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய பாரதியார் பாடல்களின் தொகுப்பு இதோ.
அமைதியான ஆழமான குரலிலும் பாரதியார் பாடல்கள் இனிமைதான்.
1. விநாயகர் நான்மணிமாலை
2. எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா?
3. காலமாம் வனத்தில்
4. செந்தமிழ் நாடென்னும் போதினிலே
5. வாழிய செந்தமிழ்
6. வந்தே மாதரம் (புதிய மொழிபெயர்ப்பு)
7. வில்லினை யொத்த புருவம் வளர்த்த
8. பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்
இதைப் பதிவேற்றியவருக்கு நன்றி.
இங்கு பதிவிறக்கம் செய்யலாம்:
Saturday, April 24, 2010
ஆசை முகம் மறந்து போச்சே
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ (ஆசை)
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம் (ஆசை)
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி (ஆசை)
கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி (ஆசை)
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ (ஆசை)
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம் (ஆசை)
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி (ஆசை)
கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி (ஆசை)
Sunday, April 4, 2010
அன்பில் சிறந்த தவமில்லை
அன்பில் சிறந்த தவமில்லை என்ற தலைப்பில் திரு.கிருஷ்ண ஜெகன்னாதன், பாரதியார் பற்றி ஆற்றிய உரை.
பதிவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்
Size: 27.4 MB | Duration: 1:59:45
http://dl.dropbox.com/u/4570429/10_Krishna%20Jagananthan.mp3
பதிவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்
Size: 27.4 MB | Duration: 1:59:45
http://dl.dropbox.com/u/4570429/10_Krishna%20Jagananthan.mp3
Thursday, April 1, 2010
காணி நிலம் வேண்டும்
உன்னிக்கிருஷ்ணன் அருமையாக பாடியுள்ளார்.
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய்
அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்
அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும்
நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும்
அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்
என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும்சொற்பொருள்:
எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும்
அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும்
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்
காணி நிலம்: 1.32 acers
Friday, February 12, 2010
Wednesday, February 10, 2010
Saturday, February 6, 2010
Saturday, January 23, 2010
என் கணவர் - திருமதி. செல்லம்மாள் பாரதி
(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.
உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.
சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!
மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.
மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.
தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
Friday, January 1, 2010
தீர்த்த கரையினிலே...
உன்னிகிருஷ்ணனின் அற்புதமான குரலில் தீர்த்த கரையினிலே.... மேலும் பல பாடல்கள் இங்கே... http://carnatic.geetham.net/music/index.php?p=Carnatic_Vocal/P.%20Unnikrishan/Bharathiar_Songs
Subscribe to:
Posts (Atom)