Wednesday, December 12, 2012

புல்லர் செய்யும் மோசம்

இந்தியா - 04.08.1906

புல்லர் நம்மை யெல்லாம் மோசம் பண்ணிவிட்டார். சென்ற வாரம் அவர் கிளம்பி விடுவாரென்று வெகு ஆனந்தத்துடன் எழுதி யிருந்தோம். அந்தக் குறிப்பு எழுதி முடிந்தவுடனேயே அவர் ராஜினாமா கொடுக்கப் போகிறா ரென்ற வதந்தி தக்க அதிகாரிகளால் மறுக்கப்படுகிற தென்ற தந்தி வந்து விட்டது. இதனையும் அக்குறிப்பின் இறுதியிலே சேர்க்கும்படியாக நேர்ந்துவிட்டது. இது என்ன கஷ்டகாலம்! கெட்ட வதந்திகள் தாம் மெய்யாக முடிகின்றனவே யல்லாமல், நல்ல வதந்திகள் பொய்யாகவே போய்விடுகின்றன. இவ்வளவிற் கப்பாலும் பெங்காளவாசிகள் புல்லர் ராஜினாமாக் கொடுக்கப் போவதாகச் சலிப்பில்லாமல் சொல்லிக் கொண்டேதானிருக்கிறார்கள்.

ஸர் பி.புல்லர் நீங்கிப்போய் விடுவதாகவும், ரெவின்யூ போர்டு ஸீனியர் மெம்பராகிய மிஸ்டர் கே.ஜி. குப்தா டி.சி.எஸ். மேற்படி ஸ்தானத்திலே நியமிக்கப்படப் போவதாகவும் பெங்காளிகள் நம்புகிறார்கள். ஆனால், பெங்காளத்து மீன் வர்த்தகர்களை எவ்வாறு அபிவிருத்தி செய்யலா மென்பதைப் பற்றி ரிப்போர்ட் செய்யும் பொருட்டு ஸ்பெஷல் கடமையில் மிஸ்டர் குப்தா நியமிக்கப்பட்டிருப்பதாகச் சமாசாரம் வந்திருக்கிறது. இதனால், இவர் லெப்டினென்ட் கர்வனர் ஸ்தானம் பெறுவாரென்ற வதந்தி தப்பென்று தெளிவாகிறது. எனவே ஸர் பி.புல்லர் சீக்கிரம் பெயர்வாரென்று கொள்வதற்கிடமில்லாமலிருக்கிறது.

(http://mahakavibharathiyar.info/b_katturaigal/pullar_seiyum.htm)

Tuesday, December 11, 2012

தமிழ் நாட்டோருக்கு இறுதி விண்ணப்பம்

13-2-1910 சூரியோதயம்

சகோதரர்களே, கதை நெருங்கிறது. சமாதானமான நியாய வழிகளிலே உங்களுக்கு ஸ்வந்திர மார்க்கங் காட்டி வந்ததைக்கூட அதிகாரிகள் நிறுத்தக் கங்கணங் கட்டிவிட்டார்கள். உங்களுக்கோ மறதி அதிகம். ஒருவர் அருகேயிருந்து ஓயாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் தான் ஞாபகமிருக்கிறது. மூன்று மாதம் படிப்பதை நிறுத்திவைத்திருந்தால் கதை முழுவதையும் மறந்து போய் விடுகிறீர்கள். மறுபடியும் அடியைப் பிடித்துச் சொல்ல வேண்டி யிருக்கிறது.

நாம் கூறிவந்த மார்க்கம் ஜனங்களுக்கு ஹிதமானதுடன் ராஜாங்கத்தாருக்கும் அபாயமில்லாதது. ஆனால், ஆங்கிலேய அதிகாரிகள் அறிவை முழுவதும் இழந்துவிட்டார்கள். வெடிகுண்டெறிபவர்களுக்கஞ்சி நமது சுதேசிய முயற்சியைக் கழுத்தை நெரிக்கத் தொடங்குகிறார்கள்.

நமது முயற்சிக்கு வயிரக் கழுத்து - எழுபது கோடி மந்திரவாள் கொண்டு வெட்டினாலும் ஒடிக்க முடியாத கழுத்து - உண்டென்பதை அவர்களறியவில்லை. அவர்கள் எப்படியும் போகட்டும். அவர்களைப் பற்றி எனக்கு விசாரமில்லை. உங்களை நினைக்கும்போதுதான் என் நெஞ்சங் கொதிக்கிறது.

தீராத வறுமை கொண்ட ஜாதி. அழகிழந்துபோன ஜாதி. பார்ப்பதற்குக் கோரமான ஜாதி. கந்தைகளை உடுத்தித் திரியும் ஜாதி. சரீர பலமில்லாத ஜாதி. மனவலிமை யில்லாத ஜாதி. ஸ்வந்திர மில்லாத ஜாதி. கடமை யறியாத ஜாதி. நோய்பற்றிய ஜாதி. கல்வி யறிவில்லாத ஜாதி. சாஸ்திர மில்லாத ஜாதி. உலக இன்பங்க ளறியாத ஜாதி. சங்கீத மில்லாத ஜாதி. நெஞ்சு கொதிக்கிறதே - என்னுடைய இரத்தமல்லவா நீங்களெல்லோரும்? உங்களை இந்த நிலைமையில் பார்க்க என் மனம் எப்படிப் பொறுக்கும்? ஒரு நாளா, இரண்டு நாளா? ஒருவரா, இரண்டு பேரா?

சகோதரர்களே, நமது முன்னோர்களிருந்த நிலைமையை மறந்து விட்டீர்களோ? அடடா! இன்னமுஞ் சோம்பரா? இன்னமும் உள் விரோதங்களா? இன்னமும் அயர்வா? எப்படிப் பிழைக்கப் போகிறீர்கள்?

ஏழைகளே, நிராயுதபாணிகளே, அற்பாயுளுள்ள நோயாளிகளே - நீங்கள் ஹிந்துக்க ளென்று ஏன் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? கல்வியும் அறிவுமில்லாத நமக்கு ஆரிய ஜாதி என்ற கெளரவ மெதற்கு? தேஜஸ், வலிமை, பராக்கிரமம், ஸ்வதந்திரம் இவை யனைத்து மில்லாத நாமங்கள் புனைந்துகொண்டு ஏன் அந்த மஹாத்மாக்களின் பெயருக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும்?

சகோதர்களே - ஒரு வார்த்தை மட்டுஞ் சொல்லுகிறேன். இன்னொரு முறை சொல்ல எனக்குச் சந்தர்பங் கிடைக்குமோ கிடையாதோ, அதுவே சந்தேகத்தி லிருக்கிறது. ஆகையால் தயவு செய்து இந்த ஒரு வார்த்தையை மனதில் பதிய வைக்கும்படி உங்கள் பாதங்களில் விழுந்து கேட்டுக் கொள்ளுகிறேன்.

அதாவது, எது வந்தாலும் அதைரியப்படாதேயுங்கள். மாதாவை மறந்துவிட வேண்டாம். நியாயத் தவறான செய்கைகள் செய்ய வேண்டாம். தைரியம், உறுதி இந்த இரண்டுமே நம்மைக் காக்கப் போகிறது.

தேசத்தை உத்தாரணஞ் செய்வதற்கு ஒவ்வொருவரும் இயன்றதெல்லாஞ் செய்க. நாம் செய்யக்கூடியது சிறிதுதானேயென்று கருதி அதனைச் செய்யாதிருந்து விடலாகாது. நியாயமான சட்டங்களை மீற வேண்டாம். அநியாயமான சட்டங்களை யெடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டும். சுதேசிய விரதத்தை உயிருள்ள வரை கைவிடாமல் ஆதரித்து வரவேண்டும். மானத்தைப் பெரிதாக நினைக்க வேண்டும். ஸ்வதந்திரத்தை எப்போதுந் தியானஞ் செய்து வர வேண்டும். வந்தே மாதரம்.

ஸி.சுப்பிரமணிய பாரதி

Monday, December 10, 2012

Andal - The Vaishnava Poetess

Preoccupied from the earliest times with divine knowledge and religious aspiration the Indian mind has turned all forms of human life and emotion and all the phenomena of the universe into symbols and means by which the embodied soul may strive after and grasp the supreme. Indian devotion has especially seized upon the most intimate human relations and made them stepping stones to the supra-human relations and made them stepping stones to the supra – human. God the Guru, God the Master, God the Friend , God the Mother, God the Child, God the Self, each of these experiences-for to us there are more than merely ideas, - it has carried to its extreme possibilities. But none of them has it pursued, embraced, sung with a more exultant passion of intimate realization than the yearning for God the Lover, God the Beloved. It would seem as if this passionate human symbol were the natural culminating-point for the mounting flame of the soul’s devotion; for it is found wherever that devotion has entered into the most secret shrine of the inner temple. We meet it in Islamic poetry; certain experiences of the Christian mystics repeat the forms and images with which we are familiar in the East, but usually with a certain timorouess foreign to the Eastern temperament. For the devotee who has once had this intense experience it is that which admits to the most profound and hidden mystery of the universe; for him the heart has the key of the last secret.

The work of a great Bengali poet has recently re-introduced this idea to the European mind, which has so much lost the memory of its old religious-traditions as to welcome and wonder at it as a novel form of mystic self-expression. On the contrary it is ancient enough, like all things natural and eternal in the human soul. In Bengal a whole period of national poetry has been dominated by this single train and it has inspired a religion and a philosophy. And in the Vaishnavism of the far south, in the songs of the Tamil alwars, we find it again in another form, giving a powerful and original trun to the images of the our old classic poetry; for there it has been sung out by the rapt heart of a woman to the Heart of the Universe.

(மேலும் வாசிக்க...)

Sunday, December 9, 2012

Blunting the Imagination

“The greatest crime that can be laid at the doors of one generation by another is that of blunting the imagination of the latter, because where there is no imagination and where there is no vision of a higer and nobler life, the people perish”
(New India, Februrary 18)

Truer words were never written.

For the imagination – not that of the idler and the dreamy parasite, but the vigorous and positive imagination of the worker, “ the vision of higher and nobler life” – this imagination is the mother of a Nation’s hope. This imagination makes a Nation’s seers, its poets and its builders of all types.

This imagination is the way to immortality, the latter that man climbs to arrive at divinity.

(மேலும் வாசிக்க...)

Saturday, December 8, 2012

India and the World


The Mother has said: “Let the world recognize me.” And the world is doings so. The Sikhs and the Rajputs on the battle fields of Europe are only supplementing the endeavors of Prof. Bose and the other intellectual leaders of Great India.

The Mother has said : “ I Manifest myself once again in my true glory”. And the nation look at her and say : “Thy beauty is great. It will be a joy for ever unto all humanity.” The intellectual classes of th West have already felt the world’s need for India. And we hope that our soldiers will convert the Western “masses” also the cult of Great India.

For the “masses”, with their instinctive love for expressed realities, everywhere demand physical proofs from spiritual changes. And the “masses” are quite right.

(மேலும் வாசிக்க...)

Friday, December 7, 2012

The Crime of Caste

“Four Varnas were made by me according to variations of character and work.”

The Gita says this, and it specifies the occupations and traits pertaining to each Varna. Everyone knows what they are. I may be permitted to call this Chatur varnya (Four Varna System) bye the name of “ the Gita theory of society”, although it is well known that the same ideal is upheld in most of the ancient writings. I do so for convenience. The Gita theory may, or may not, promote the highest interests of man. It was never experimented in its pure form, or, if it was, history tells us nothing about it. As a hypothesis it is one of the best and the most attractive. At least some of us think so.

But the caste law is leagues away from the Gita theory. For the Brahmanas have long ceased to make Vedas and Shastras; they have long ceased to think seriously of eternal verities of the sciences of this earth. They have totally forgotten the meaning of the older and purer writings. They adopt all professions. They are cake-sellers, railway clerks, and police – constables. And their general intelligence and character are naturally on a level with their pursuits. The Kshatriyas have long ceased to govern.

(மேலும் வாசிக்க...)

Thursday, December 6, 2012

ஜாதி 2

ஜூலை 1917

ஜனவகுப்புகள் தனித்தனி சுபாவங்களுடைய வெவ்வேறு ஜீவன்களாம். ஆனால் “ஜாதி”கள் வெறுமே வலிமைக்காகச் சேர்ந்த கூட்டங்களைத் தவிர வேறில்லை. அதுபற்றியே இவற்றின் உட்குணங்களும் புறச் செய்கைகளும் எங்கும் ஒரே சந்தமாக, ஒரே மாதிரியாக இருக்கின்றன. இவற்றுள்ளே வேற்றுமைகளிருந்தாலும் அவை தொழில் வலிமையைப் பற்றின வேற்றுமைகளே யன்றி குணபேதங்களல்ல. நவீன உலகத்தில் ஜனத்தின் ஜீவ சக்திக்கும், ஜாதியின் நிபந்தனைகளுக்கும் போர் நடக்கிறது.

ஆசியாக் கண்டத்தின் மத்தியின் முன்பு மனிதர் குடியிருந்த நாட்டுக்கும், அதன் மேல் இடைவிடாமல் ஏறிக்கொண்டு வந்த பாலைவனத்து மணலுக்கும் சண்டை நடந்தது. உயிரும் அழகும் கொண்ட நாட்டை மணல் அழித்துவிட்டது. அதுபோல் ஜாதி ஜனத்தை அழிக்கிறது. மனுஷ்யப் பொதுஜன உத்தம லக்ஷணங்களைப் பரவச் செய்தல் முக்கியமில்லை என்ற எண்ணத்திலிருந்து ஜாதியின் திறமை வளர்ப்பதாகிய கல்நெஞ்ச ஸம்ப்ரதயம் பலமடைகிறது. ஸான்ப்ரான்ஸிஸ்கோ நகரத்திலிருந்து லண்டன்வரை, லண்டனிலிருந்து டோக்யோ வரை ஜாதியெண்ணம் ஆதிக்கம் பெற்றிருக்கும் நகரங்களனைத்திலும் ஒரே மாதிரியான இயல்பைக் காணலாம். அவற்றின் முகங்களைக் காட்டுவதில்லை முகமூடிகளைக் காண்பிக்கின்றன. ஜனம் ஜீவனாதலால் அதற்கு ஆத்மப் பிரகாசம் வேண்டும். அது ஸ்ருஷ்டி செய்யும். கல்வி, கலை, கோயில் முதலியன ஜனத்தின் ஸ்ருஷ்டிகளாம். இவை ஒரே விருந்தில் பலவித உணவுகள் போலே உண்மையை அறிந்து இன்பமடைவதில் வெவ்வேறு சுவை தருகின்றன. மனுஷ்ய லோகத்தை உயிர் வளமுடைய தாக்கிப் பலவிதங்களில் அழகு படுத்துகின்றன. ஆனால் ஜாதிகள் ஸ்ருஷ்டி செய்வதில்லை. அவை பெருக்குகின்றன, அழிக்கின்றன; பெருக்குதலாவது சோறு துணி சேர்த்தல் போன்ற தொழில்வகை. பெருக்கும் கூட்டங்கள் அவசியமே. அழிக்குங் கூட்டங்களும் அவசியமாக இருக்கக் கூடும். ஆனால் இவை பேராசையும், விரோதமும் சேரும்போது, மனுஷ்ய ஜீவனை ஒரு மூலையில் ஒதுக்கி விடுகின்றன. இதனால் இசை தவறுகிறது. ஜனங்களின் சரித்திரம் அழிவை நோக்கிக் கழுத்தொடியும் வேகத்துடன் செல்லுகிறது.

மனுஷ்ய ஜாதி உயிருடனிருக்குமிடத்தே ஆதர்சங்களை, உத்தம தர்மங்களைப் பின்பற்றுகிறது. செத்த கட்டுப்பாடாகிவிடும் போது ஆதர்சங்களுக்கு இடங்கொடுப்பதில்லை. அதன் கட்டட மெல்லாம் புறத்தொழிலாகவே நடைபெறுகிறது. உள்ளிருக்கும் தர்மக் காட்சிக்கு அதன் உத்த்ரம் நேரில்லை. பல வளையாத முரட்டுத் தடைகளைக் கடந்து செல்ல வேண்டியதாகிறது.

மனுஷ்ய ஜீவனுக்குத் தனிமைக் குணமொன்றிருக்கிறது. தனிமையாகிய களத்திலேதான் அவனுடைய ஆத்மா தன்னைப் பிரகாசப்படுத்திக் கொள்ளவும் வளரவும் ஸ்வாதீன மடைகிறது. மனிதன் பொது நிலையை விட்டு ஒரு ‘தொழிலாளி’ அதாவது யாதேனுமோர் வியாபாரம், அல்லது விவகாரத்தால் கட்டுப்பட்டவன் ஆகும் போது அவனைச் சுற்றி இறுகலான ஓடு தோன்றுகிறது. இந்தத் தொழிலாளித்தனம் என்ற களத்திலே மனிதர் தத்தம் அறிவுக்குத் தனிவழிகள் காட்டித் தமது பலத்தை ஒரு முகமாக்கித் தாம் தாம் முற்படவேண்டுமென்று பரஸ்பரம் முழங்கைகளால் ஏற்றித் தள்ளுகிறார்கள். தொழிலாளித்தனம் அவசியந்தான். ஆனால் அதை ஆரோக்கிய வரம்பு கடந்து செல்லவிடக்கூடாது. அது மனிதனை அடிமைப்படுத்தவும், குறுக்கவும், கடினமாக்கவும், ஆதர்சங்களில் நம்பிக்கையிழந்து லெளகிகலாபந் தேடுவோனாகச் செய்யவும் இடங்கொடுக்கக் கூடாது.

புராதன ஹிந்து தேசத்தில் ஸ்மிருதியால் தொழில்களில் வரம்புகடவாமல் நிறுத்தப்பட்டன. அவை முதலாவது ஜனங்களின் பொதுத் தேவைகளாகவும், பிறகு அவரவருக்கு ஜீவனோபாயங்களாகவும் கருதப்பட்டன. எனவே எல்லையில்லாத போட்டியின் தூண்டுதலுக்குட்படாமல், தனித்தனி தனது பரிபூரணத் தன்மையைப் பரீக்ஷை செய்ய நேரமிருந்தது.

ஜனங்களுடைய பொதுவான தொழிலாளித் தனத்துக்கு ஜாதியென்று பெயர். அது ஜனங்களுக்குப் பெரிய விபத்தாய்க் கொண்டு வருகிறது. ஏனெனில் அதில் மிகுந்த லாபமுண்டாகிறது; எனவே உயர்ந்த ஆதர்ஸங்களில் நியதிகளில் மனிதருக்குப் பொறுமையில்லாது போகிறது. லாபம் எவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவு ஸ்வார்த்தம், பொறாமை, விரோதம், இவற்றின் அல்லல் பலமடைகிறது. இவை மனிதர்களின் மனத்தில் லாபத்தால் விளைகின்றன.

உயிருள்ள ஜனங்கள் ஜாதிகளாக இறுகுதல் மேன்மேலும் அவசியமாகிறது. ஜாதியக் கொள்கையின் வளர்ச்சியால் மனிதனுக்கு மனிதன் பெரிய விபத்தாய்விட்டான். அக் கொள்கை தீராத பயத்தை விளைவிப்பதனால், மேன்மேலும் பெரிய ஆபத்தாக மூண்டு வருகிறது.

கூட்டத்தின் புத்தி ஒரு குருட்டு சக்தி. நீராவி முதலிய பூத சக்திகளைப் போலவே அதையும் பிரமாண்டமான பலம் சேர்க்க உபயோகப் படுத்தலாம். ஆதலால் லோபத்தாலும் பயத்தாலும் தமது ஜனங்களை வலிமைக் கருவிகளாக்க விரும்பும் அரசர் இந்தக் கூட்டப் புத்தியைத் தமக்கு வேண்டிய வழியில் பயிற்சி செய்கிறார்கள். ஜனங்களுடைய மனதில் எங்கும் பயமும், ஸ்வஜாதிக் கர்வமும், பிற ஜாதிகளிடம் விரோதமும் வளர்த்தல் கடமை யென்று நினைக்கிறார்கள். பத்திரிகைகளையும் பள்ளிக் கூடப் புஸ்தகங்களையும் கோயில் ஆராதனைகளையுங் கூட இந் நோக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

தெய்வ விரோதமான இந்தக் கருட்டுக் கொள்கையைத் தைரியத்துடன் எதிர்த்துப் பேசுவோரை நியாயஸ்தலங்களில் தண்டிக்கிறார்கள்; அல்லது கூட்டத்திலிருந்து விலக்குகிறார்கள்.

தனி மனிதன் (லோபதாப) முதலிய, உணர்ச்சிகளின் சமயத்திலும் யோசனை பண்ணுவதுண்டு. ஆனால் ஒரு கூட்டத்தின் உணர்ச்சியுடன் கலக்கும் போது யோசனை செய்வதில்லை. அவனுடைய தர்மப் புலன் மழுங்கிப் போகிறது. கூட்ட மனங்களில் மனிதத் தன்மையை நசுக்கி விடுவதானால் மிகுந்த பலமுண்டாகிறது. ஏனென்றால் கூட்டப் புத்தி இயல்பில் அநாகரிகமானது. அதன் சக்திகள் பூத சக்திகளைப் போன்றது. இருளின் பெரிய வலியை ஜாதி தனக்குப் பயன்படுத்திக் கொள்வதால் ஜாக்கிறதையாக இருக்கிறது.

சங்கட காலங்களில் ஒரு ஜனத்தின் தற்காப்புச் சிந்தையை ஆதிக்கமுடையதாகச் செய்தல் அவசியமே. அப்போது அதன் ஒற்றுமையுணர்ச்சி கடுமையான விழிப் பெய்துகிறது. இந்த மிகையுணர்ச்சி ஜாதியில் எப்போதும் சாகாதபடி செயற்கையுபாயங்களால் காக்கப்படுகிறது. ஒருவனுடைய வீட்டைத் திருடர் வந்து கொள்ளையிடும் போது அவன் போலீஸ் சேவகனுடைய தொழிலை மேற்கொள்ளவேண்டும். ஆனால் அவனுடைய சாதாரண ஸ்திதியே அப்படியாய்விட்டால் அவனுடைய வீட்டுச் சிந்தை மிகையாகி வீட்டருகே போவோர் வருவோர் மேலெல்லாம் பாய்ந்து விழும்படி செய்கிறது.

இந்த மிகையுணர்ச்சி ஒருவன் கர்வப்படத் தக்க உடைமையன்று. இது மெய்யாகவே ஆரோக்கியத்துக்கு லக்ஷணமன்று. அதுபோலவே ஒரு ஜாதியின் தீராத தற்போதமும் ஜனங்களுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும். அதனால் தற்காலத்துக்குப் பயன் உண்டாவது போலே தோன்றினாலும் மனிதனுடைய நித்ய ஜீவனுக்கு நஷ்ட முண்டாகும்.

ஒரு கூட்டம் சேர்ந்து யாதேனுமொரு குறுகிய நோக்கத்துக்குத் தம்மைப் பயிற்சி செய்து கொள்ளுமாயின் பிறகு அதையே தளராமல் காத்து அதற்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று போதனை செய்தல் அந்தக் கூட்டத்திற்கு லாபகரமாகிறது.

ஒரு ஜன முழுதையும் குறுகின ஆதர்ஸப்படி பயிற்சி செய்வதே ஜாதியக் கொள்கை. அது ஜனங்களுடைய உள்ளத்தைக் கவரும்போது தர்மக் குறையையும் குருட்டறிவையும் விளைவிப்பது நிச்சயம். இந்த ஜாதியக் கொள்கையின் காலம் பிரம்மாண்டமான ஸ்வார்த்தமும் செருக்கும் தலைப்பட்ட காலம். இது நாகரிகத்தில் அசாசுவதமான ஓரிடைக்காலமேயன்றி வேறில்லையென்ற நம்பிக்கையை நாம் உறுதியாகப் பற்றி நிற்போம்.

மனித சரித்திரத்தின் இந்த அசாசுவதமான குணத்தைத் திருப்தி செய்யும் பொருட்டு சாசுவதமான வேலை செய்வோர் இனி வரப்போகிற உண்மையான விடுதலைக் காலத்துக்குத் தகுதியில்லாது போவார்கள்.

ஜாதியக் கொள்கை தடையின்றி வளர்வதனால் மனுஷ்ய நாகரிகத்தின் ஆதாரநீதி தன்னையறியாமலே மாறுபடுகிறது. சமூகத்து மனுஷ்யனுடைய உத்தம லக்ஷ்யம் பிறர் நலம். ஆனால் ஜாதி தொழிலாளித்தனம் உடையதாகையால் அதற்குத் தக்கபடியே அதன் உத்தம லக்ஷ்யம் தன் நலம். இதனாலேயே தனி மனுஷ்யன் தக்குனத் தனக்கென்ற அவா உடையவனாக இருந்தால் பழிக்கப்படுகிறான். ஒரு ஜாதி அப்படியிருந்தால் புகழப்படுகிறது. இதனால் ஏக்கத்துக்கிடமான நீதிக் குருட்டுத் தனம் உண்டாகிறது. அது ஜனத்தின் மதத்தை ஜாதியின் மதத்தோடு ஒன்றாகப் போட்டுக் குழப்புகிறது. இதனாலே தான் உலகத்தின் பெரும் பகுதியை கிறிஸ்தவ ஜாதியார் ஆளுவதனாலே கிறிஸ்து மதந்தான் உயர்ந்ததென்று சொல்லுவோர் சிலர் இருப்பதாகக் காண்கிறோம். இது ஒரு திருடன் களவு செய்த சொத்தனை அளவிட்டு அவன் மதக் கொள்கையை ஆதரிப்பதாகும். ஜாதிகள் தாம் பிற மனிதரை யதேஷ்டமாகக் கொன்று முடித்தது பற்றி ஆலயங்களில் விசேஷங் கொண்டாடுகின்றன. “டக” ஜாதிக் கள்வர் கூட்டம் தமது கொள்கையை நிறைவேற்றியது, தாம் வணங்கிய தேவியின் கிருபையென்று நினைத்தார்கள் என்பதை மேற்படி ஜாதிகள் மறந்துவிடுகின்றன. “டக” ஜாதியார் விஷயத்தில் அவர்களுடைய தேவதையை வெளிப்படையாகவே ஸம்ஹார மூர்த்தியென்று சொல்லி வணங்கினார். அதுமேற்படி குற்றவாளி ஜாதியின் கொலையுணர்ச்சியை தெய்வமாக்கினவாறு தனி மனிதனுடைய மனமன்று, கூட்டத்தின் பொது உள்ளம். ஆதலால் தெய்விகமென்று கருதப்பட்டது. அதேமாதிரி நவீன சர்ச்சு (கிறிஸ்தவாலயங்களில்) ஜாதியின் பொது மனமென்ற கூட்டு நிலையில் ஸ்வார்த்தமும் அற்பச் செருக்கும், விரோதமும் தெய்வ பூசையுடன் கூசாமல் வந்து கலந்து கொள்ளுகின்றன.

தன்னலத்தை நாடி யுழைத்தால் முழுமையும் அஹங்காரமாகவே யிருக்க வேண்டு மென்று கட்டாயமில்லை. எல்லா நலத்துடன் அது பெருந்தவங் கூடும், எனவே ஆதர்சிகமாகப் பேசுமிடத்து, ஜன ஸ்வார்த்தத்தில் பிரகாசத்தை நாடும் ஜாதியக் கொள்கை அவமானமடைய ஹேதுவில்லை. ஆனால் நாம் அனுபவத்தில் காண்பது யாதெனில் செல்வமடைந்த ஜாதியொவ்வொன்றும் பிறருக்குத் தீங்கு செய்யும் ஸ்வார்த்தச் செயல்களிலே தான் அதையடந்திருக்கிறது. அதாவது வியாபார வேட்டைகளினாலும், அந்நிய தேச உடைமைகளாலும், அல்லது இரண்டும் சேர்ந்ததாலும் என்க.

இந்த லெளகிகச் செல்வமிகுதி ஓயாமல் ஜனத்தின் ஸ்வார்த்தம் இயல்பைப் போஷிப்பதுமன்றி ஒரு ஜாதிக்கு ஸ்வார்த்தம் (தன்னலம்) அவசியம். ஆதலால் அதுவே தர்மம் என்ற பாடத்தை மனிதரின் உள்ளத்தில் அழுந்தச் செய்கிறது. ஐரோப்பாவில் ஜாதியெண்ணத்தில் அழுத்தம் எப்போதும் வளர்ந்து செல்வதால் அது நேர்ச் செய்கையாலும், தொத்தும் திறத்தாலும் மனிதருக்குப் பெரிய விபத்தாய்க் கொண்டு வருகிறது.

மனுஷ்ய ஸ்வபாவத்திலேயே தீமைகள் இருப்பது மெய்தான். நாம் தர்மவிதிகளை நம்பியிருந்தாலும் தன்னாட்சியில் பயிற்சி பெற்றிருந்தாலும் அவை நம்மையறியாமல் வெளியே கிளைத்து விடுகின்றன என்பதும் மெய்தான். ஆனால் அவை தம் நெற்றி மீது பழிச்சூடு போட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வெற்றியே அவற்றின் கொடூரரூபத்தை அதிக கோரமாகக் காட்டுகிறது. மனுஷ்ய சரித்திர முழுமையிலும் துன்பப்படுவோர் சிலரும் படுத்துவோர் பிறரும் இருக்கவே செய்வார்கள். தீமையை வெல்லுதல் எக்காலத்திலும் பரிபூரணமாக நிறைவேறாது. தீ எரிவது போல் நமது நாகரிகத்தில் அது தொடர்ச்சியாக நடக்கும் செய்கையாம்.

நித்தியமான பரிபூரணத்வ லக்ஷ்யத்துக்கும் அதன் நிரந்தர ஸ்தானத்துக்கும் உள்ள பொருத்தமே ஸ்ருஷ்டியென்று சொல்லப்படும்.

நன்மையென்னும் உடம்பாட்டு லக்ஷ்யம் ஸாதனக்குறைவு என்ற எதிர்மறையுடன் சமவேகமாகச் செல்லும் மட்டும், அவ்விரண்டுள் முழுப் பிரிவுண்டாகாதிருக்கும் மட்டும் நாம் துன்பத்துக்கும் நஷ்டத்துக்கும் பயப்பட வேண்டா.

ஆதலால் முற்காலங்களில் யாதேனு மொருஜனம் கலகந் தொடங்கிப் பிறருடைய மனுஷ்ய உரிமையைப் பறித்துவிட முயன்ற போது சில சமயங்களில் அந்த ஜனத்துக்கு வெற்றியும் சில சமயங்களில் தோல்வியும் ஏற்பட்டது; அவ்வளவு தான். ஆனால் இந்த ஜாதியக் கொள்கை இன்று சர்வ சம்மதமாய்த் தனது தன்னலம் அளவிலே பிரமாண்டமாக இருப்பது கொண்டு அதை தர்மமென்று காட்டத் தலைப்படுமிடத்தே இந்தக் கொள்கை பிறர் சொத்துக்களை கொள்ளையிடுவது மாத்திரமேயன்றி, மனுஷ்ய ஜாதியின் உயிர் நிலையைத் தாக்குகிறது. தர்ம விதியைப் புறக்கணிக்கும் புத்தியை மனிதருக்கு அவசரமாகவே விளைவிக்கிறது. ஏனெனில் ஜனம் தர்மவிதியை தெய்விகமாக எண்ண, ஜாதி அந்த விதியைக் காற்றிலே தூற்றி விடுகிறதெதனால் எனில், ஜனத்தைக் காட்டிலும் ஜாதியே பெரிதென்ற கொள்கை பலவிதமான தந்திரங்களால் ஜனங்களுக்குக் கற்பிக்கப் படுவதனால் என்க.

ஒரு நோய் மூளையைத் தாக்கும் போது அது, மிகவும் கடுமையாகிறது என்று கேள்விப்படுகிறோம். ஏனென்றால் எல்லாவிதமான வியாதி சக்திகளையும் இடைவிடாமல் முற்றுகை போடுவது மூளையேயாம். ஜாதியத் தன்னலக் கொள்கையின் உள் நிலைமை ஒரு ஜனத்திற்கு நேரிட்ட மூளை வியாதியைத் தவிர வேறில்லை. தற்காலத்து அந்த நோயின் அறிகுறிகள் எவையெனில் சிவந்த கண்களும், குவிந்த முட்டிகளும், கொடுஞ் சொற்களும், கொடுஞ் செயல்களுமாம். இயற்கையிலே உள்ள சொஸ்தமாக்கும் கருவிகளை அது நொறுக்கிப் போடுகிறது.

ஜனசமூகத்தின் உயிருக்கு நல்ல வழி காட்டும் சக்தி யாதெனில் ஆத்ம த்யாகமும், அனுதாபத்துக்கும் கூட்டுத் தொழிலுக்கும் இடமாகிய தர்மசிந்தையுமே என்க. சூழ்ந்திருக்கும் வஸ்துக்களுடன் அனுகூல சம்பந்தம் கொண்டிருப்பதே அதன் தொழிலாம்.

இன்னும் பெருங்கேடு யாதெனில் ஜனங்களின் இந்தக் கோணல் நீதியானது தேசபக்தியென்ற பகட்டான பெயர் புனைந்து கொண்டு தன்னை ஒரு மேலான தர்மமாகக் காண்பித்துக் கொண்டு திரிகிறது. சுழலுகிற தனது தொத்து நோயை உலக முழுவதும் பரப்பித் தன் ஜ்வரத்தை ஆரோக்கியத்தின் சிறந்த குறியென்று முழங்குகிறது. இயற்கையில் தீங்கில்லாத ஜனங்களின் மனத்தில் பொறாமையுண்டாக்குகிறது.

“ஜன்னி நிலையில் இருக்கும் அக்கம்பக்கத்துத் தேசத்தாருக்குள்ள பலம் நமக்கில்லையே, அவர்கள் பிறருக்குச் செய்யும் தீமை நம்மால் செய்ய முடியவில்லையே நாமன்றோ தீமையனுபவிக்கிறோம்” என்று பொறாமையுண்டாக்குகிறது.

எனது ஐரோப்பிய நண்பர் அடிக்கடி என்னிடம், “இத்தனை கொடிய தீமையை அழிக்க உபாய மென்ன?” என்று கேட்கிறார்கள். வெறுமே எச்சரிக்கை செய்துவிட்டு மாற்று வழி சொல்லா திருக்கிறேனென்றே என்மேல் பலர் குற்றஞ் சொல்லுகிறார்கள்; ஒருவித அனுஷ்டானத்தால் நன்மையுண்டாகு மென்று நினைக்கிறோம். அனுஷ்டானத்துக்குப் பின்னே மறைந்து நிற்கும் உள்ள நிலை தவறாக இருந்தால் அனுஷ்டானம் இன்றில்லாவிட்டாலும் நாளைக்குத் தீமையுண்டாக்கவே செய்யும் என்பஹ்டை நாம் மறந்து விடுகிறோம். இன்று ஒரு ஜாதி கொண்டிருக்கும் அனுஷ்டானம் நாளை எல்லா ஜாதிக்கும் பரவும். மனிதர் தமது மிருகக்குணங்களையும் கூட்டக் கோப தாபங்களையும் விடும்வரை புதி அனுஷ்டானம் புதிய தொரு துன்பக் குருவி ஆகுமேயன்றி வேறில்லை அல்லது வியர்த்தமாகும். நாம் தார்மிகமாக ஸ்த்குணத்தையும் கார்யஸித்திக் குரிய அனுஷ்டானத்தையும் ஒன்றாகக் கருதிக் குழம்பியே பழகியிருக்கிறோமாதலால் ஒவ்வொரு புதிய அனுஷ்டானமும் தோற்றுப் போகும் போது தர்ம விதியினிடத்திலேயே அவநம்பிக்கை கொள்ள நேரிடுகிறது.

ஆதலால் நான் எந்தப் புதிய அனுஷ்டானத்திலும் நம்பிக்கை வைப்பதில்லை. தெளிவான யோசனையும், பெருந்தகைமையுடைய உள்ளமும், நேர் நடையுமுடையவர்களாய் உலக முழுதிலும் ஆங்காங்கே இருக்கும் தனித் தனி மனிதர்களிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அவர்களே தர்மத்தின் உண்மைக்கு வாய்க்கால்களாவார்கள். நமது தார்மிக லக்ஷ்யங்கள் உளியும் சம்மட்டியும் வைத்துக் கொண்டு வேலை செய்யவில்லை. சிற்பிகளிடம் அனுமதி கேட்காமல் மரம் வளர்வது போல் மண்ணுக்குள் வேர்களையும் இயற்கையிலேயே விடுகின்றன. இந்தக் காரணத்தாலேதான் ஜப்பானில் ப்ரஞ்ச் தேசத்து யெளவனப் பிராயமுடைய தர்மிஷ்டனொருவனைக் கண்டபோது இனி நாகரிகத்தில் உயர்ந்த காலம் வருவதைப் பற்றி என் மனதில் நிச்சய மேற்பட்டது. ஐரோப்பாவில் அழிவின் பெரிய சக்திகள் களிக் கூத்தாடிக் கொண்டிருக்கையிலே நான் இந்தத் தனியான வெளிக் கீர்த்தி பெறாத ப்ரஞ்சு இளைஞனைக் கண்டேன். அவனுடைய முகத்தில் புதிய ஸூர்யோதயத்தின் ஒளி வீசிற்று. அவனுடைய வாக்கில் புதிய உயிரின் அதிர்ச்சி தோன்றிற்று. எனவே ராஜ்யதந்த்ரிகளின் பஞ்சாங்கத்தில் பதிவாகா விடினும் மஹத்தான புதிய யுகம் ஏற்கெனவே பிறந்து விட்டதென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

- ரவீந்திரநாத டாகுரின் ஐம் பெருங் கட்டுரைகள் என்ற நூலிலிருந்து மொழி பெயர்த்தவர் பாரதியார்

Wednesday, December 5, 2012

To the Editor of New India

Rights and Duties

In the course of a recent lecture at Madras, Mrs. Annie Besant is reported to have emphasised the upholding of one’s duties in preference to one’s rights. And the Chairman of the meeting, Justice Sadasiva Iyer, naively remarked (in effect): “ After listening to Mrs. Besant’s speech, I have come to see that man has no rights at all. He has only duties. God alone has rights, etc.”

Now, I have a right to submit that such teachings contain but a partial truth and may do injury to the cause of our national progress which, I am sure, is as dear to the hearts of Mrs. Besant and Justice Iyer to anyone else’s.

My duties are based on my rights. That is to say, may duties to others are defined by their duties to myself. It is my duty to respect my father, because I am his son and he has permitted me the right to the life and the culture that he has bequeathed to me.

In my view, they are of equal sacredness: my rights and my duties. My duties I must fulfil. My rights I must vindicate. Life is possible only on such a basis.

Meanwhile, it is the right and duty of the wise ones to purify the strong by teaching them their duties and to strengthen the weak by teaching them their rights.

Pondicherry
October 17                                                                C. Subramania Bharati
(http://www.mahakavibharathiyar.info/English/rights_and_duties.htm)

Tuesday, December 4, 2012

சென்னை ஹைகோர்ட்

11.08.1906

ஹைகோர்ட்டில் காலியான இரண்டு ஸ்தானங்களிலே ஒன்றில் மிஸ்டர் மில்லர் நியமனமாய் விட்டார். மற்றொன்றிலே ஸ்ரீ சங்கரன் நாயர் நியமிக்கப்படுவாரென நாமெல்லாம் எதிர் பார்த்திருந்தோம். இதற்கு முன் மேற்படி ஸ்தானத்தில் இரண்டு தடவை ஆக்டிங் வேலை பார்த்து, மிகுந்த சாமர்த்தியம் காட்டி ஜனங்களின் நம்பிக்கைக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாகி நிற்கும், மிஸ்டர் நாயரைக் கவர்ன்மெண்டார் இந்தச் சமயத்தில் மறந்து விடுவார்களென்று எவரும் நினைக்கவேயில்லை... இங்ஙனமிருக்க கவர்ன்மெண்டார் இப்போது மேற்படி ஸ்தானத்திலே ஸர்க்கார் வக்கீல் (அட்வகேட் ஜெனரல்) ஆகிய மிஸ்டர் வாலிஸ் என்பவரை நியமிக்க நிச்சயித்திருப்பதாக அறிந்து மிகவும் வருத்தமடைகிறோம். இதற்கு முன் சங்கரன் நாயருக்கு ஆக்டிங் உத்தியோகம் தரும் போதெல்லாம் மேற்படி வாலிஸ் எங்கே போயிருந்தார்? அப்போதே அவருக்கேன் கொடுத்திருககக் கூடாது? அவரைக் காட்டிலும் ஸ்ரீ நாயர் தகுதியுள்ளவரென்ற எண்ணங் கொண்டுதானே கவர்ன்மெண்டார் நாயருக்கு உத்தியோகமளித்தார்கள். இப்போது லார்டு ஆம்ப்டில் கவர்னராயிருப்பாரானால் மிஸ்டர் சங்கரன் நாயருக்கே மேற்படி ஸ்தானம் கொடுக்கவேண்டுமென்று நிச்சயித்திருப்பார். நமது தற்காலக் கவர்னராகிய ஸர்.ஆர்தர் லாலி இதுவரை இருக்குமிடந் தெரியாமல் மறைந்திருந்து விட்டு இப்போது ஆரம்பத்திலே செய்யப்போகும் ஓர் பெரும் காரியத்தைத் தாமாக ஆரம்பிக்கிறாரே என்பது நமக்கு விசனமுண்டாக்குகிறது. சங்கரன் நாயரைப் போன்ற தகுதியுள்ள வக்கீல் ஒருவர் தமக்குக் கடைசியாக ஜட்ஜி ஸ்தானம் ஸ்திரமாகக் கிடைக்குமென்ற நிச்சயமிருந்தாலொழிய இரண்டு மூன்று தடவை டெம்பரரி வேலைக்கு வர ஒப்புக்கொண்டிருப்பாரா?

இந்த விஷயங்களிலே கவர்ன்மெண்டார் ஜாதி பேத ஆலோசனைகளைக் கொணர்ந்திருக்க மாட்டார்களென்று நம்புகிறோம். எப்படியிருந்த போதிலும் ஸ்ரீ சங்கரன் நாயர் நியமனம் பெறாவிட்டால், அதிலிருந்து பொது ஜனங்களுக்கு மிகுந்த மன வருத்தமும், கவர்ன்மெண்டார் செய்கையிலே வெறுப்பும் உண்டாகும் என்பதில் ஆஷேபமில்லை. சென்னைக் கவர்ன்மெண்டாரின் நியமனத்துக்கு இன்னும் இந்தியா மந்திரியின் அனுமதி கிடையாமலிருப்பதால் பொது ஜனங்களின் உணர்ச்சியை இந்தியா மந்திரிக்கே நேரில் அறிவித்துக் கொள்ள வேண்டுமென்று சென்னை மஹாஜன சபையாரும், வக்கீல் சங்கத்தாரும் எண்ணி அங்ஙனமே தந்தியனுப்பியிருக்கிறார்கள். மேற்படி ஸ்தானத்தில் சங்கரன் நாயர் நியமிக்கப் பட்டாலொழிய ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாகுமென்பதை இவர்கள் மிஸ்டர் மார்லிக்கு அறிவித்திருக்கிறார்கள். மிஸ்டர் மார்லி எவ்விதம் செய்வாரோ அறிகிலோம்.

Monday, December 3, 2012

Letter to The Hindu

In the course of a recent lecture at Triplicane, Mr. J.c. Rollo of the Pachaiyappa’s College has supported the use of English as the only right medium of instruction to Indian boys and girls. But he economizes, rightly, that the consensus of Indian opinion is against his vie. He thus summarizes the arguments on our side. “It is urged that a student will save much time by being instructed in the vernacular (sic), that text-books in the vernacular (sic) will be within easy reach of all classes of people, that an Indian possessed of literary genius will be able to commit the fruits of his genius in his won vernacular(sic).” This summary is far from being exhaustive.

Our main argument is that one’s mother-tongue is the only natural and human medium for imparting instruction. If anyone should doubt this, let him go and make enquires of educationalist in Japan, Scandinavia, England, Italy, Mexico or any other land where human beings are human beings. Speaking of the Tamil country, especially,. The blunder of using a foreign medium becomes shocking because the Tamil language happens to be far superior to English for accurate and scientific expression – a fact which naturally enough, Mrs. Rollo seems to be quite ignorant of. “It cannot be denied”, he says, naively, “that there is no vernacular (sic) in Southern India fitted for the teaching of science or the technicalities of history”. But the self-complacency betrayed by this statement of Mr. Rollo is quit pardonable in him, considering the present stat of things educational in British India.

“Insufficiency of scientific terms” is the next charge leveled against our languages. But the “Nagari Pracharini Sabha”, is publishing a very useful dictionary of scientific terms in easy Sanskrit which can be introduced wholesale into every Indian language, thus securing the unity of scientific phraseology for India, even as Europe has borrowed wholesale from Latin and Greek for a similar end.

Within a few years, the novelty of such terms will disappear and they will look quite natural in Tamil or Gujarati books, even as all those big classical terms appear very natural nowadays in English or French scientific text-books. Of course, we have no objection to teaching English as secondary language in our schools and colleges. I think that any rational Englishman ought to be satisfied with this concession.

C Subramania Bharati
(The Hindu dated 18.10.1916)

Sunday, December 2, 2012

மனைவிக்குக் கடிதம்

ஓம்

ஸ்ரீ காசி
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்
சி.சுப்பிரமணிய பாரதி

Saturday, December 1, 2012

திலகருக்கு கடிதம்

The "Bala bharata" Office
Triplicane, Madras
Dated, 29th May 1908

To
Sriman B.G.Tilak
Poona


Dear Guruji,

I have received a letter from Pandit Krishnavarma asking us to open a Hindi class in Madras, under the auspices of the Chennai Jana Sangham. We have already opened a small class. I hope it will bel faily well-attended in due course of time. I shall report its progress. latter on.

We have decided to hold a Naitonal Provincial Conference in Madras, on the lines marked out in the Calcutta Congress. What about the next Congress? What has become of our Nationalist Committee? Our Secretary Mr.Chidambaram is just now you know where. Please Mr.Kelkar to correspond with our Sangham about the matter.

Yours sincerely,
C.Subramania Bharati

(http://mahakavibharathiyar.info/kadithangal/thilakar.htm)