Thursday, June 21, 2012

என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே

மந்த மாருதம் வீசுறும் போதினும்
           வானில் மாமதி தேசுறும் போதினும்
கந்த மாமலர் கண்ணுறும் போதினும்
           கானநல்லமுது உண்ணுறும் போதினும்
சந்தமார் கவி கற்றிடு போதினும்
           தாவில் வான்புகழ் பெற்றிடு போதினும்
எந்த வாறினும் இன்புறு போதெல்லாம்
           என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே

(சகரவர்த்தினி 1906 பிப்ரவரி இதழில் வெளிவந்த துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்என்ற கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.)

No comments:

Post a Comment