Monday, June 18, 2012

வெங்கடேசு ரெட்டப் பூபதி - சீட்டுக்கவி



பாரிவாழ்ந்திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின்கண்ணே
ஆரிய! நீயிந் நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்
காரியங்கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லாயோ?

விண்ணள வுயர்ந்த வெங்கடேசு ரெட்ட மன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பண், பாவளவுயர்ந்த தென்பா;
எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ் கவிஞர் வந்தால்
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ?

கல்வியே தொழிலாக் கொண்டாய்! கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்!
சொல்லிலே நிகரிலாத புலவர் நின்சூழலுள்ளால்
எல்லினைக் காணப்பாயும் இடபம்போல் முற்படாயோ?

எட்டயபுரம் - சுப்பிரமணியபாரதி
1919 மே 2

No comments:

Post a Comment