Sunday, March 25, 2012

தாயுமானவர் வாழ்த்து

என்றும் இருக்க உளங்கொண் டாய்!
இன்பத் தமிழுக் கிலக்கிய மாய்,
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!
ஒன்று பொருள ஃதின்ப மென
உணர்ந்தாய், தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!

No comments:

Post a Comment