Thursday, March 22, 2012

அகவிழியில் காண்பது

கனவென்றும் நனவென்றும் உண்டோ ?
காண்பது காட்சியல் லாற்பிறிதாமோ ? இங்கு
மனையி லிருப்பது வானம் - அந்த
வானத்தின் வந்தவர் தேவர்முனிவர்
நினைவது செய்கை அறிவீர் -
எந்த நேரத்துந் தேவர்கள் காப்பது வையம்
வினவிற் பொருள்விளங் காது - அக
விழியைத் திறந்திடில் விண்ணிங்கு தோன்றும்

(காளிதாஸன் என்ற புனைபெயரில் பாரதி சுதேச மித்திரனில் ‘வேணுமுதலி’ என்ற கதையில்  உள்ளது இந்தப்பாடல்)

No comments:

Post a Comment