Tuesday, May 8, 2012

திருவல்லிக்கேணி சுதேசிய கிருஹியம்


17 டிசம்பர் 1907                                 பிலவங்க மார்கழி 2

சூரத்தில் நடக்கிற காங்கிரசுக்கு நாங்கள் எல்லோரும் இவ்விடமிருந்து நாளது டிசம்பர் மாதம் 20-ஆந் தேதி வெள்ளிக் கிழமை மாலையில் ரிசர்வ் வண்டிகள் மூலமாய்ச் செல்லுகிறபடியால் இந்த ராஜதானியிலிருந்து காங்கிரசுக்குச் செல்லும் பிரதிநிதி (டெலிகேட்ஸ்)களும் பார்ப்பவர்களும் (விசிட்டர்ஸ்) இது பார்த்தவுடன் அவர்கள் புறப்படும் விவரத்தைத் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெரு 87-வது நம்பர் சுதேசிய கிருஹத்தாருக்குத் தெரிவிக்கும்படிக்கும் நாளது மாதம் 20-ஆம் தேதி காலையில் மேற்படி கிருஹத்திற்கு வந்து சேரும்படியும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

                           சி.சுப்பிரமணிய பாரதி

No comments:

Post a Comment