Sunday, May 6, 2012

காலனுக்கு உரைத்தல்

ராகம்-சக்கரவாகம்                                                                    தாளம்-ஆதி

பல்லவி

காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்  (காலா)

சரணங்கள்

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - எந்தன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித்
                                                                                                   துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே - நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட  மூடனே?
                                                                                                   அட (காலா)

ஆலாலமுண்ட வனடி சரணென்ற மார்க்கண்டன் - தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன் - இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்! உனைவிதிக்கிறேன் - ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட
                                                                                                    (காலா)

No comments:

Post a Comment