Friday, September 14, 2012

பெரியோரின் பெருமை கெடாது


கண்ணிலான் காலிற்
கவின்மணியை யெற்றிவிட்டால்
மண்ணி லதுதான்
மதிப்பகன்றதாய் விடுமோ?

பொய்த் தொழிலோன் மைதிலியாம்
வைதனைப் புன்காவல்
வைத்ததனா லன்னை
மதிப்பிழந்து போயினளோ?

ஐவர் முன்னே பாஞ்சாலி
யாடையுரிந் தார்கயவர்;
மைவளர்ந்த கண்ணாளின்
மாண்பகன்று போயினதோ?

( http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=324 )

No comments:

Post a Comment