Monday, November 5, 2012

இறைவா! இறைவா!

பல்லவி
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்? - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! 

சரணங்கள் 
சித்தினை அசித்தடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்.

முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள்
பரமா !பரமா! பரமா!

No comments:

Post a Comment