Friday, November 30, 2012

எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்குக் கடிதம்


ஓம் சக்தி

கடையம்
30 ஜனவரி 1919

ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்.

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு வாங்கியிருக்கிறேன். அதைச் செப்பனிடுவதற்கு அவசியமான தொகை நாம் கையிலிருந்து செலவிட்டு, மேற்படி தொகைக்கு வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின்மீது செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக்கொள்ளுதல் இன்றியமையாததாயிற்று.

இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி, அவர்கள் கொடுக்கும் தொகையுடன் நீயும், உன்னால் இயன்றது சேர்த்துக் கூடிய தொகையை "ஸ்ரீமான் சி.சுப்பிரமணிய பாரதி, பழைய கிராமம், கடையம்" என்ற விலாசத்துக்கு ஸ்ரீமதி சின்னமாச் சித்தி மூலமாகவேனும் நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்.

உனக்கு மகாசக்தி அமரத்தன்மை (தருக)

உனதன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி

1 comment:

  1. (http://www.sasariri.com/2012/11/blog-post_29.html) தளம் மூலம் உங்கள் தளம் அறிந்தேன்... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

    முந்தைய பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்... நன்றி...

    ReplyDelete