Wednesday, November 21, 2012

வன்னியர்கள் விரதம்

விஜயா 2.2.1910

தென்னிந்தியாவில் வன்னியர்கள் பெருந் தொகையான ஜனங்கள். இவர்களுக்குள் கட்டுப்பாடு மெத்த அதிகம். இப்போது ஆங்காங்கு ஸபை கூடித் தங்கள் குலத்தவர்களின் நன்மையைக் கருதி பல நற்காரியங்கள் செய்து சீர்திருத்தி வருகின்றனர்.

தென்னாப்பரிக்காவில் வெள்ளையர்களால் பலவிதமாகய் இடர்ப் படுத்தப்படும் இந்தியர்களில் பெரும்பாலர் சென்னைவாசிகளே. சென்னைவாசிகளிலும் பலர் இந்த வன்னிய குலத்தவர்களே.

இந்தத் தென்னாப்பரிக்காவிலுள்ள இந்தியர்களின் மீட்சிக்காக இந்த வன்னிய மஹாஜனங்கள் ஒரு விரதம் கைக்கொண்டிருக்கின்றனர். அதாவது, வருஷத்தில் ஒரு நாள் எல்லாரும் இந்தத் தென்னாப்பரிக்கா இந்தியர்களின் கஷ்டங்களுக்காக உபவாச விரமிருக்கப் போவதாய்ச் செய்தி எட்டுகிறது.

இது உண்மையாய் இருக்கும் பக்ஷத்தில் இவர்களும் வடநாட்டு ஆரிய ஸமாஜிகள் போலவே பிரதி மாசமும் ஒரு நாள் உபவாஸமிருந்து அன்றைய தினம் தங்கள் வீட்டு ஆகாரச் செலவை ரொக்கமாகச் சேர்த்துத் தென்னாப்பரிக்கா இந்தியர்களுக்கு ஒரு ஸஹாய நிதியாக ஏற்படுத்தியனுப்பினால் மெத்த நலமென்று தோன்றுகிறது.

இதை மேற்படி வன்னிய மஹாஜனங்கள் அங்கீகரித்தல் நலம். உண்மையில் இவர்கள் சேரமான் பெருமாள் நாயனார், குலசேகரப் பெருமாள் இவர்களின் வம்சத்தவர்களானால் இந்த ஜீவகாருண்ய விரதத்தைக் கைக்கொண்டு பரோபகாரம் செய்வார்கள்.

No comments:

Post a Comment