Thursday, February 2, 2012

யான்

17 செப்டம்பர் 1906,                                                                                    பராபவ புரட்டாசி 2

அருளா லெவையும் பார் என்றான் அதை
அறியாதே சுட்டியென் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால் -- கண்ட
என்னையுங் கண்டிலே னென்னடி தோழி!
                                                                         - தாயுமானவர்

ஆயிரங் கோடி அறிஞர்கள் பற்பல
ஆயிர யுகங்க ளாராய்ந் தறிகிலா
‘யான்’ உடை யியற்கை யானோ அறிவன்!
மீனுணர்ந் திடுங்கொல் வியன்கடற் பெருமை?
அருள்வழிக் காண்கென் றருளினர் பெரியோர்;
மருள்வழி யல்லான் மற்றொன் றுணர்கிலேன்!
அகிலமும் ‘யான்’ என ஆன்றோரிசைப்பர்
மகிதலத் திருளின் மண்டிய மனத்தேன்
யானதை யொரோவழிக் கண்டுளேன்; அதனினும்
மானத ஒளியது மங்குமோர் கணத்தே
யானெனும் பொருள்தான் என்னைக்கொல்? அதனையிவ்
வூனெனக்கொள்வ ருயிரிலார் சிலரே.
பிரமமே யானெனப் பேசுவர் பேசுக!
பிரமமே யானெனப் பேசினர் பெரியோர். 


3 comments:

  1. அற்புதமான பாடல்.'நான் யார்?'என்ற பாரதியின் ஆன்மீகத் தேடலின் விளைவுதான் இந்தப் பாடல் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ’நானெனும் பொய்யை நடத்துவோன் நான்’னு ஒரு இடத்துல எழுதியிருக்கார்.

      அதையும் பதிகிறேன். நன்றி.

      Delete
    2. Itharkana arththam ???

      Delete