Thursday, February 23, 2012

சந்திரிகை

யாணர்க் குறையுளா மிந்து நாடதனிற்
காணற் கினிய காட்சிகள் பலவினு
மாணப் பெரிய வனப்பமைந் தின்கவி
வாணர்க் கமுதா யிங்கிடும் பொருளிதென்
றூணப் புலவோ னுரைத்துளன் முன்னாள்
அஃதுதான், கருமையிற் படர்ந்த வானமாங் கடலிடை
ஒருமையிற் றிகழு மொண்மதித் தீவினின்
றெல்லாத் திசையினு மெழில்பெற வூற்றுஞ்
சொல்லா லினிமைகொள் சோதியென் றோதினன்.
ஓர் முறை கடற்புற மணன்மிசைத் தனியே கண்ணயர்ந்
திடைப்படு மிரவி லினிதுகண் விழித்துயான்
வானக நோக்கினேன் மற்றதன் மாண்பினை
யூனமா நாவினி லுரைத்தலும் படுமோ?
நினைவறுந் தெய்விகக் கனவிடைக்குளித்தேன் வாழிமதி!
(சுதேசமித்ரன் 25.09.1906)

No comments:

Post a Comment