Tuesday, February 21, 2012

பண்டாரப்பாட்டு

வையகத்தேசட வஸ்துவில்லை
     மண்ணுங் கல்லும் சடமில்லை
மெய்யுரைப்பேன் பேய்மனமே
     மேலும் கீழும் பயமில்லை !

பையப்பையத் தேரடா
     படையும் விஷமுங் கடவுளடா
பொய்யும்மெய்யுஞ் சிவனடா
     பூமண் டலத்தே பயமில்லை !

சாவும்நோவும் சிவனடா !
     சண்டையும் வாளும் சிவனடா !
பாவியும்ஏழையும் பாம்பும்பசுவும் 
     பண்ணும் தானமும் தெய்வமடா !

எங்குஞ்சிவனைக் காணடா !
     ஈனப் பயத்தைத் துரத்தடா !
கங்கைச் சடையா காலன்கூற்றே
     காமன் பகையே வாழ்க நீ !

பாழுந்தெய்வம் பதியுந்தெய்வம்
     பாலை வனமுங் கடலுந்தெய்வம்
ஏழு புவியும் தெய்வம்தெய்வம்
     எங்கும் தெய்வம் எதுவும்தெய்வம்

வையத்தே சடமில்லை
     மண்ணுங் கல்லும் தெய்வம்
மெய்யுரைப்பேன் பாழ்மனமே
     மேலும் கீழும் பயமில்லை

No comments:

Post a Comment