Tuesday, February 28, 2012

சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை


25 மே 1916                                                  நள வைகாசி 12
பாரத நாட்டுக்கு உடனே சுய ஆட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லக்ஷக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த க்ஷணமே ப்ரிடிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஐரோப்பாவில் நடக்கும் யுத்த நெருக்கடியிலே நாம் உள் நாட்டுத் திருத்தங்களுக்கு மன்றாடுவதனால் நாம் ப்ரிடிஷ் ராஜாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய கடமை தவறிப் போகுமென்று சொல்லி நமது முன்னேற்றத்தைத் தடுக்க விரும்புவோரின் அர்த்தமில்லாத வார்த்தையைக் கருதி இக்காரியத்தை நிறுத்தி வைக்கலாகாது.

அயர்லாந்து, போலாந்து என்ற தேசங்களின் திருஷ்டாந்தத்தைக் காட்டலாம். 

புதுச்சேரி                                               சி.சுப்பிரமணியபாரதி
அநலம் வைகாசி 7         

No comments:

Post a Comment