Monday, February 20, 2012

புயற்காற்று

 நள கார்த்திகை 8

ஒரு கணவனும் மனைவியும்

மனைவி:
                     காற்றடிக்குது, கடல் குமுறுது
                     கண்ணை விழிப்பாய் நாயகனே!
                     தூற்றல் கதவு சாளர மெல்லாம்
                     தொளைத் தடிக்குது பள்ளியிலே.

கணவன்:
                     வானம் சினந்தது; வையம் நடுங்குது
                     வாழி பராசக்தி காத்திடவே!
                     தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
                     தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.

மனைவி:
                    நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே,
                    இந்தநேர மிருந்தால் என்படுவோம்?
                    காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
                    காத்தது தெய்வ வலிமை யன்றோ!

No comments:

Post a Comment