Monday, February 27, 2012

அம்மாக் கண்ணு பாட்டு

பூட்டைத் திறப்பது கையாலே - நல்ல
மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே - இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

ஏட்டைத் துடைப்பது கையாலே - மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே;
வேட்டை யடிப்பது வில்லாலே - அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

காற்றை யடைப்பது மனதாலே - இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே - உயிர்
துணி வுறுவது தாயாலே

No comments:

Post a Comment