Wednesday, February 1, 2012

கண்ணம்மா என் காதலி

காட்சி வியப்பு
செஞ்சுருட்டி - ஏகதாளம்
ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!
             சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!
             வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை
             பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும்
             நக்ஷத் திரங்க ளடி!

சோலை மல ரொளியோ-உனது
            சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது
            நெஞ்சி லலைக ளடி!
கோலக் குயி லோசை-உனது
            குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா!
            மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!
             சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!
             சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்ம தியில்-வதுவை
             முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ?-இது பார்.
             கன்னத்து முத்த மொன்று!

(சில பாடல்கள் வலையேற்றப்பட்டிருக்கின்றன. RSS Readerல் அவற்றைப் பெற முடியாது. தளத்திற்கு வந்து கேட்கலாம்.)

1 comment:

  1. மருவுதல் என்றால் என்ன? பின் வரும் சுட்டியில் 7ம் நம்பர் பார்க்க http://10hot.wordpress.com/2009/02/26/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

    ReplyDelete