Saturday, August 4, 2012

மிருகங்களைச் சீர்திருத்தல்

மனிதனைச் சீர்திருத்த லக்ஷத்தொன்று உபாயங்கள்ஏற்பட்டிருக்கின்றன. மிருகங்களைச் சீர்திருத்த நாம் முயற்சிசெய்யவில்லை.

கோயில், குளம், அரண்மனை, நீதிஸ்தலம், வீடு, மன்று முதலிய எண்ணற்ற விதங்களால் மனிதர் தம்மைத்தாமே சீர்திருத்திக் கொள்ள முயல்கின்றார்கள். பள்ளிக்கூடமே உபாயம் என்றும் ஸகல மனுஷ்யருக்கும், எழுத்துப் படிப்புச்சொல்லித் தீரவேண்டும் என்றும் ஐரோப்பியக் கல்விநிபுணர்கள் ஸித்தாந்தம் பண்ணுகிறார்கள். இது நிற்க. மிருகங்களையோ, முதலாவது தின்கிறோம். ஆடு, மாடு, கோழி,"காடை, கவுதாரி, புறா, குயில், குருவி, வாத்து, பன்றி, மான்முதலிய பல ஜந்துக்களை உயிரோடு வெட்டித் தின்கிறோம்; வேட்டையாடுகிறோம். யானை முதல் முயல் வரை பலஜந்துக்களை, புலி, கரடி, சிங்கங்களை துஷ்டமிருகங்கள்என்றும், ஊரும் பாம்பு தேள் முதலியவைகளை துஷ்டஜந்துக்கள் என்றும் நாம் சொல்லுகிறோம். ஏன்? அவைநம்மைக் கொல்வதனாலே.

எத்தனையோ ஜந்துக்களை நாம் கொல்லுகிறோம். நமக்கு மிருக பாஷைகளில் என்ன பெயரோ? துஷ்ட மனிதன் என்ற பெயரிருக்கலாம். பசுக்களையும் மாடுகளையும் நாம்வதைக்கிறோம். நமக்கு வதைப்பதில் எத்தனை ஸ்வதந்திரமோ அவ்வளவு ஸ்வதந்திரம் அவற்றிற்கும் உண்டு.நீ மிருகத்தைவிட அதிக புத்திசாலியென்று நினைத்தால்அதைச் சீர்திருத்து. அப்படியே, சீமையில் சில குரங்குகளைச் சில ஸர்க்கஸ் கம்பெனியார் கால் சட்டை, கோட், தொப்பி,கண்ணாடி, பூட்ஸ் வகையறா மாட்டி, சாராயம் கொடுத்து,ஸிகரெட்டுப் பிடிக்கச் சொல்லி, உடுப்பு மாட்டி, உடுப்புக்கழற்றி, மேஜையிற் தீனி தின்று, அமளிப்படுத்தும்படி கற்றுக்"கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைக் காட்டி காசு வாங்கிமனிதன் பிழைத்திருக்கிறான்.

இரக்கத்தைக் காணோம். அவை பரஸ்பரம் ஹிம்சை இல்லாமல் எல்லாம் எல்லாவற்றின் ஹிதார்த்தமாகவாழ்விக்க உபாயம் உண்டாக்கலாம். நமது முன்னோர் பசுவைமாதா என்று சொல்லி வணங்கினார்கள். நாம் அவர்களை (ஈக்வாலிடி) ஸமத்வம், (லிபர்டி) விடுதலை (ப்ரெடெர்னிடி), உடன்பிறப்பு தெரியாத மூடர்கள் என்று சொல்லி மேற்படி பசுக்களைக் கறி சமைத்துத் தின்ன இச்சிக்கிறோம். அதன்பாலை ஊட்டி நம்முடைய குழந்தைகளை வளர்த்தோம். ஏன்? நினைப்பில்லாமல்.

போடா!

வெள்ளைக்காரன் சொன்னான்; ''யோக்கியதை உத்தமமார்க்கம்''; நியாயமான வார்த்தை.

மாட்டை நாம் தாய் போலவே நினைப்பது யோக்யதையா? கறி சமைத்துத் தின்பது யோக்யதையா?கு யில் பாடுகிறது. கந்தருவர் கேட்டுத் தலை அசைக்கிறார்கள். நீ ஏன் அம்பு போட்டு அதைக் கொல்லுகிறாய்?

மிருங்களுக்குப் பள்ளிக்கூடம் போட்டுஅவற்றிற்கு நல்ல வழி காண்பித்து அவற்றைச் சீர்திருத்துதல் மிகவும் அவசியம். ஆனால் 'ஹிந்துக்கள் அத்தனை பேருக்குமே இன்னும்பள்ளிக்கூடம் போடவில்லையே? ஹிந்துக்களில் "நூற்றுக்குப் பதினொருவர் மாத்திரமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்று கேள்விப்பட்டஞாபகமிருக்கிறதே. அப்படியிருக்க, அதற்கு முன்பு, மிருகங்களுக்குப் பள்ளிக் கூடம் போட முற்படலாமோ'' என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். அங்ஙனம் கூறலாகாது.

ஏனென்றால், நம்முடைய கடமையை நாம் செய்யவேண்டும். நாம் கூடுமானால், ஹிந்துக்களுக்கும் பள்ளிக்கூடம் போடுவோம். அவர்கள் சரிப்பட்டு வரவில்லையானால் மிருகங்களுக்குப் பள்ளிக்கூடம் போட்டு அவைகளைச் சீர்திருத்தும்போது, அதை ஹிந்துக்களும் மற்ற ஜாதியாரும் கண்டு பயனடையக் கூடும்.

தன்னைத்தானே திருத்திக்கொள்ளாதவன் பிறஜந்துக்களைத் திருத்த அதிகாரம் பெற மாட்டான். தன்னைத்தானே திருத்திக் கொள்வதே பிரதானம். தன்னைத் திருத்தி அமரனாகச் செய்துகொள்க. அதுவே ஒருவன் செய்யவேண்டிய தலைமைத் தொழில்.

No comments:

Post a Comment