Wednesday, August 22, 2012

கிளி விடு தூது


பல்லவி

சொல்ல வல்லா யோ? -- கிளியே
சொல்ல நீ வல்லாயோ?

அனுபல்லவி

வல்ல வேல் முருகன் -- தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று

சரணங்கள் 

தில்லை யம்பலத்தே - நடனம்
செய்யும் அமரர்பிரான் - அவன்
செல்வத் திருமகனை - இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று

அல்லிக் குளத்தருகே - ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே - அங்கொர்
முல்லைச் செடியதன்பாற் - செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று

பாலை வனத்திடையே - தனைக்கைப்
பற்றி நடக்கையிலே - தன்னகை
வேலின் மிசையாணை - வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று

1 comment: