Friday, July 6, 2012

தராசு சொல்லும் அரிய உண்மை

"இந்த உலகத்து மேன்மைகளெல்லாம் அநித்யம். கையால் நமக்கு வேண்டியதில்லை. செல்வத்தையும் நாம் ஆத்மலாபத்தை விரும்பி இவ்வுலகத்தை வெறுத்துத் தள்ளிவிட வேண்டும்த்தியையும் தேடி முயற்சி செய்பவன் அஞ்ஞானத்தில் ழுந்திக் கிடக்கிறான். நாம் ஆத்மலாபத்தை விரும்பி இவ்வுலகத்தை வெறுத்துத் தள்ளிவிட வேண்டும்” என்பது முறை.

மடங்களிலேயும், காலக்ஷேபங்களிலும், பஜனைக் கூடங்களிலும், புராணப் படனங்களிலும், மதப்பிரஸங்கங்களிலும், பிச்சைக்காரர் கூட்டத்திலும், வயது முதிர்ந்தோர் சம்பாஷணைகளிலும், எங்கே திரும்பினாலும், நமது நாட்டில் இந்த “வாய் வேதாந்தம்” மலிந்து கிடக்கிறது.

"உலகம் பொய்; அது மாயை; அது பந்தம்; அது பாபம்; அது விபத்து; அதை விட்டுத் தீர வேண்டும்.” இந்த வார்த்தைதான் எங்கே பார்த்தாலும் அடிபடுகிறது. இத்தேசத்திலே படித்தவர்கள், அறிவுடையோர், சாஸ்திரக்காரர் எல்லோரும் ஒரே மொத்தமாக இப்படிக் கூச்சலிட்டால், அங்கே லெளகிக காரியங்கள் வளர்ந்தேறுமா? மனம் போல வாழக்கையன்றோ?

பூர்வமதாசார்யர் ‘பாரமார்த்திக’மாகச் சொல்லிப்போன வார்த்தைகளை நாம் ஓயாமல் லெளகிகத்திலே சொல்லிக் கொண்டிருப்பது சரியா? வெகுஜன வாக்கு நமது தேசத்தில் பலித்துப்போய் விடாதோ? இகலோகம் துன்பமென்று நம்பினால், அது துன்பமாகத்தான் முடியும். இந்த உலகம் இன்பம். இதிலுள்ள தொழில், வியாபாரம், படிப்பு, கேள்வி, வீடு, மனைவி, மக்கள் எல்லாவற்றிலும் ஈசன் அளவிறந்த இன்பத்தைக் கொட்டி வைத்திருக்கிறான். விதிப்படி நடப்போர் இந்த ஸூகங்களை நன்றாக அனுபவிக்கிறார்கள். ஈசனுடைய விதி தவறும் கூட்டத்தார் துன்பமடைகிறார்கள்.

No comments:

Post a Comment