Friday, July 20, 2012

வள்ளிப்பாடு

ராகம்-கரஹரப்பிரியை தாளம்-ஆதி


பல்லவி

உனையே மயல் கொண்டேன், -- வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்!

சரணங்கள் 

எனையாள்வாய், வள்ளீ, வள்ளீ!
இளமயிலே, என் இதய மலர்வாழ்வே,
கனியே, சுவையுறு தேனே,
கலவியி லேஅமு தனையாய்! -- கலவியிலே

தனியே - ஞான விழியாய்! நிலவினில்
நினைமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயாகிட வே வந்தேன்.

No comments:

Post a Comment