Sunday, April 15, 2012

விண்ணப்பம்


13 பிப்ரவரி  1906                                            விசுவாவசு மாசி 2

எமது தாய் நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஓர் மாலையாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதியிருக்கி்ன்றேனாதலின் பண்டைத் தமிழ் நூல்களில் பாரத நாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர் தெரிந்தனுப்புவார்களாயின் அவர்மாட்டுமிக்க கடப்பாடுடையவனாவேன். தமிழ்ப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாட்டுப் படலங்களில் நிடதம் கோசலம் முதலிய பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் வருணனைகள் பயன்படமாட்டா. தற்காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் பெருமக்கள் புதியவனாக ‘தேச பக்தி’ப் பாக்கள் புனைந்தனுப்புவாராயின் அவையும் நன்றியறிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.

சிறிய ஆற்றுலடையேனாகிய யான் இப்பெரிய தொழிலை நிறைவேற்றுவதன்கண்ணே எவ்வாற்றானும் துணை புரிய விரும்புவோர் கால பரியயம் செய்யலாகாதென்று பிரார்த்திக்கின்றேன்.
                                           
     இங்ஙனம்,
சி. சுப்ரமணிய பாரதி

விலாசம்:- சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை

No comments:

Post a Comment