Thursday, April 5, 2012

காளிக்கு சமர்ப்பணம்

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
             இருபத் தேழு வருடங்கள் காத்தனன்;
வந்த னம்;அடி பேரருள் அன்னாய்!
             வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்த னைதெளிந் தேனினி யுன்றன்
             திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்;
வந்தி ருந்து பலபய னாகும்
             வகைதெ ரிந்துகொள் வாழி யடி நீ!

No comments:

Post a Comment