Wednesday, April 4, 2012

கண்ண பெருமானே

காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ 
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே?கண்ண பெருமானே -நீ 
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!
காற்றிலே குளிர்ந்த தென்னே? கண்ண பெருமானே -நீ 
கனலிலே சுடுவ தென்னே? கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்ப லென்னே? கண்ண பெருமானே-நீ 
திக்கிலே தெளிந்த தென்னே? கண்ண பெருமானே!

ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே -நீ
எளியர்தம்மைக் காப்ப தென்னே? கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்ப தென்னே? கண்ண பெருமானே!-நீ 
பொய்யர் தம்மை மாயப்ப தென்னே? கண்ண பெருமானே!
போற்றி!போற்றி!போற்றி![போற்றி! கண்ண பெருமானே!-நின்
பொன்னடிகள் போற்றி நின்றேன், கண்ண பெருமானே!

No comments:

Post a Comment